தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நந்தா படத்தில் அறிமுகமாகி காமெடியனாக நடித்துக் கொண்டிருந்த கருணாசுக்கு ஒரு கட்டத்தில் ஹீரோவாக வேஷம்கட்ட ஆசை வந்தது. அவரை ஹீரோவாக போட்டு படம் எடுக்க யாரும் முன்வராததால் தானே தயாரிப்பாளராகி திண்டுக்கல் சாரதி என்ற படத்தை தயாரித்து நடித்தார். அந்தப் படம் ஓரளவுக்கு ஓடி லாபம் கிடைத்தது. தன்னை மக்கள் ஹீரோவாக ஏற்றுக் கொண்டார்கள் என்று நம்பிய கருணாஸ். அடுத்து அம்பாசமுத்திரம் அம்பானி படத்தை எடுத்தார். அது தோல்வி அடைந்தது. பிறகு எப்படியாது மீண்டும் ஜெயித்து விடலாம் என்று ரகளபுரம் படத்தை எடுத்தார். அந்த படமும் ஓடவில்லை. இப்போது இந்த படங்களை தயாரித்ததால் எனக்கு கோடிக் கணக்கில் கடனாகி விட்டது என்ற புலம்புகிறார்.
அவர் கூறியதாவது: காமெடியனாக நடிச்சா மூணு நாலு சீன்தான் தர்றாங்க. என்கிட்ட இருக்கிற திறமையை வெளிக்காட்ட ஹீரோவாக நடிச்சேன். நான் நடிச்ச படங்கள் என்னைத் தவிர வேறு யாரும் நடிக்க மாட்டாங்க. அதுங்க நல்ல படமா இல்லையான்னு ஜனங்களுக்கு தெரியும். அடுத்தடுத்து படம் தயாரிச்சதுல ஒன்பது கோடி வரைக்கும் கடனாகிப்போச்சு. இந்த கடனை நான் அடைச்சிடுவேன். அந்த நம்பிக்கை இருக்கு. அதுக்கான திறமையும் இருக்கு.
ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சதும் மத்தவங்க படத்துல காமெடியனா நடிக்க மாட்டார்னு கிளப்பி விட்டுட்டாங்க. இதனால பல படங்கள் போச்சு. இப்போ உஷாராயிட்டேன். யார் கூப்பிட்டாலும் நடிக்க ரெடின்னு சொல்லிட்டேன். தினமும் ஷூட்டிங் போகணும். நல்லா நடிக்கணும், வாழ்நாள்பூரா இனி இதைத்தான் செய்யணும்னு முடிவு பண்ணியிருக்கேன். தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடக்குது அந்தப் பக்கமே போகலை. விநியோகஸ்தர் சங்க தேர்தல் நடக்குது அந்தப் பக்கம் போகல. நான் உண்டு நடிப்பு உண்டுன்னு இருக்கேன். என்றார்.