ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சினிமாவில் சூர்யா அறிமுகமானபோது, பாடல் காட்சிகளில் நடனமாட வேண்டும் என்றாலே அன்றையதினம் படப்பிடிப்பு தளத்துக்கு பயந்து கொண்டே செல்வார். அந்த அளவுக்கு சுத்தமாக நடனமே தெரியாமல்தான் அவர் பீல்டுக்குள் என்ட்ரி ஆனார். ஆனால் இன்றைக்கு அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில், அதிரடியாக நடனமாடுகிறார் சூர்யா. அந்த அளவுக்கு அவர் தன்னை குறுகிய காலத்திலேயே தயார்படுத்திக்கொண்டார்.
அவரைத் தொடர்ந்து இப்போது விஜயசேதுபதியும் இதுவரை நடித்த படங்களில் நடனமாட வேண்டும் என்றாலே நடுங்கிக்கொண்டேதான் ஸ்பாட்டுக்கு சென்று வந்தார். அதனால் பல படங்களில் அவருக்கு பாடல் காட்சிகளில்கூட நடன அசைவுகளை கொடுக்காமல் இருந்தனர். இருப்பினும், இப்படியே இருந்தால் தான் ஒரு குறையுள்ள ஹீரோவாகவே ஆகிவிடுவோம் என்று நினைத்த விஜயசேதுபதி, பின்னர் நடனத்திலும் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் முதன்முதலாக நடனமாடியவர், அதன்பிறகு, அட்டகத்தி தினேஷ் நடித்த திருடன் போலீஸ் படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் ஆடியவர், வன்மம் படத்தில் ஓப்பனிங் பாடலில் கிருஷ்ணாவுடன் இணைந்து அதிரடி நடனமாடியிருந்தார். அதையடுத்து இப்போது நயன்தாராவுடன் நடித்து வரும் நானும் ரெளடிதான் படத்தில் பாடல் காட்சிகளில் நடனமாடி வருகிறார். இந்த நிலையில், தன்னை புதிய படங்களுக்கு புக் பண்ண வரும் இயக்குனர்களிடம், வழக்கமான பாடல் காட்சிகளாக இல்லாமல் ஏதாவது வித்தியாசம் செய்யுங்கள். அதோடு என்னையும் வித்தியாசமாக நடனமாட வையுங்கள் என்று கேட்டுக்கொள்கிறாராம்.