‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
கார்த்தியின் முதல் படம் பருத்திவீரன். மதுரை மண்வாசனையில் உருவான அந்த படத்தில் அவர் சண்டியர் போன்று சுற்றிக்கொண்டிருப்பார். அவரும், அவரது முறைப்பெண் ப்ரியாமணியும் தீவிரமாக காதலிப்பார்கள். கடைசியில் ஒன்று சேராமலேயே இறந்து விடுவார்கள். தற்போது கார்த்தி நடிக்கும் கொம்பன் படம் இராமநாதபுரம் மண்வாசனை கதையில் உருவாகிறது. அதேசமயம், இநத படத்திலும் சண்டியர் போன்று காலரைத்தூக்கி விட்டுக்கொண்டு திரிந்தாலும், பாசத்துக்கு கட்டப்படும் மனிதராக நடித்திருக்கிறாராம் கார்த்தி. அதோடு, அவரும், லட்சுமிமேனனும் கணவன்-மனைவியாக நடித்துள்ளார்கள். அதனால் மனைவியின் அன்புக்கு அவர் கட்டுப்படுவது போன்ற காட்சிகளும் படத்தில் உள்ளதாம்.
அது மட்டுமின்றி, அவர்களின் அன்னியோன்யத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒரு பாடலும் உள்ளதாம். இந்த பாடலில், அவர்களுக்கிடையிலான அன்பு, பாசம், நேசம் மட்டுமல்லாது, கிராமத்து பெண்களுக்கே உரிய வெட்கத்தையும் அருமையாக வெளிப்படுத்தி நடித்துள்ளாராம் லடசுமிமேனன்.இப்படி வெட்கத்தை வெளிப்படுத்த சில நடிகைகளைப்போன்று அவர் பயிற்சி எதுவும் எடுக்கவில்லையாம். இந்த பாடலில் கார்த்தியைப்பார்த்து இந்த இந்த மாதிரி வெட்கப்பட வேண்டும் என்று டைரக்டர் சொன்னதுமே அதை அப்படியே பிடித்துக்கொண்டாராம். லட்சுமிமேன்ன.
அந்த வகையில் லட்சுமிமேனன் வெட்கப்பட்டு நடித்த காட்சிகள் கிராமத்து பெண்களுக்கே வெட்கத்தை கற்றுக்கொடுக்குமாம். அந்த அளவுக்கு இயல்புத்தன்மையோடு நடித்துள்ளாராம் லட்சுமிமேனன்.