ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
டி.ராஜேந்தர், எஸ்.ஏ.ராஜ்குமார் போன்ற இசையமைப்பாளர்களிடம் 12 வருடங்கள் கிட்டாரிஸ்டாக வேலை செய்துவிட்டு எழில் இயக்கிய அமுதே என்ற படத்தில் இசையமைப்பாளரானவர் சுனில் சேவியர். அதன்பிறகு கார்த்திக் நடித்த கலக்குற சந்துரு மற்றும் தண்டாயுதபாணி, கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம், பிரம்மபுத்திரா போன்ற படங்களுக்கு இசையமைத்தவர், தற்போது ஒத்தகால் மண்டபம், வந்தாள், காதல் பண்டிகை, அரூபம் உள்பட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில், விரைவில் திரைக்கு வரவிருக்கும் அரூபம் படத்தை இவர் பெரிய அளவில் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்.
அதுபற்றி இசையமைப்பாளர் சுனில் சேவியர் கூறுகையில், சினிமாவுக்கு நான் வந்து 18 ஆண்டுகளாகி விட்டது. எழில் என்ற பெரிய டைரக்டரின் படத்தில்தான் அறிமுகமானேன். ஆனபோதும், நான் இசையமைத்த படங்கள் வெற்றி பெறாததால் இப்போது வரை பின்தங்கியே இருக்கிறேன். எனது பாடல்கள் மட்டும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது. இருப்பினும், தற்போது நான் இசையமைத்துள்ள படங்கள் எனக்கு வெற்றியை பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறும் அவரது இசையில் அரூபம் விரைவில் திரைக்கு வருகிறது.
இந்த படம் காதல் கதை என்றாலும், வித்தியாசமான ஹாரார் படம். காட்சிகள் மிரட்டலாக இருக்கும். ஒவ்வொரு காட்சிகளிலும் அதிரடியான இசையை கொடுத்திருக்கிறேன். அதனால் இந்த படம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதனால் சினிமாவில் பல வருடங்களாக போராடிக்கொண்டிருக்கும் எனக்கு இந்த அரூபம் படமே திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன் என்று சொல்லும் சுனில் சேவியர், இப்போதைக்கு எனக்குத்தேவை ஒரு ஹிட் படம்தான். படம் ஹிட் ஆனால் எனது பாடல்களும் ஹிட்டாகி விடும். அதையடுத்து நானும் பிரபல ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைககும் வாய்ப்புகளை பெற்று விடுவேன் என்கிறார்.
மேலும், காதல் பண்டிகை என்ற படத்தை இயக்கும் நவமணி என்ற இயக்குனர், 6 இசையமைப்பாளர்களிடம் சென்று டியூன் கேட்டு விட்டு பிடிக்காமல் என்னிடம் வந்தார். அப்போது அவர் சொன்ன சூழலுக்கு நான் கொடுத்த டியூன்கள் அவருககு மிகவும் பிடித்து விட்டதால் என்னை உடனே கமிட் பண்ணினார். அந்த அளவுக்கு இயக்குனர்களை கவர்ந்திழுக்கும் இசையை கொடுக்கும் எனனால், ரசிகர்களையும் நூறு சதவிகிதம் கவர முடியும் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாகவே உளளது.