ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அஜீத் நடித்த காதல் மன்னன் என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் பரத்வாஜ். அதையடுத்து, அமர்க்களம், பாண்டவர்பூமி, ரோஜாக்கூட்டம், ஆட்டோகிராப், ஜெமினி, அசல் என பல படங்களுக்கு இசையமைத்தார். முக்கியமாக டைரக்டர் சரணின் ஆஸ்தான இசையமைப்பாளர் இவர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பரத்வாஜ்க்கு சரியான படவாய்ப்புகள் இல்லை. அதனால், திருவள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு இசைவடிவம் கொடுக்கத் தொடங்கிய அவர், அதற்கான வேலைகளில் கடந்த 3 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்திருக்கிறார்.
இதுபற்றி பரத்வாஜ் கூறும்போது, எனது சொந்த ஊர் திருநெல்வேலி என்றாலும் நான் பிறந்து வளர்ந்ததெல்லாமே டெல்லிதான். அதனால் சினிமாவில் இசையமைப்பாளரான பிறகுதான் எனக்கு திருக்குறள் பற்றி தெரியவந்தது. ஒன்னேமுக்கால் அடியில் இருக்கும் ஒவ்வொரு திருக்குறளிலும் அடங்கியருக்கும் ஆழமான கருத்துக்கள் என்னை கவர்ந்தன. அதனால், திருக்குறளுககு இசை வடிவம் கொடுத்து முழுமையாக மக்களை சென்றடைய செய்ய வேண்டும் என்று யோசித்தேன்.
அப்போது ஒவ்வொரு திருக்குறளிலும் தாளக்கட்டை இருப்பதை கண்டறிந்தேன். 1330 திருக்குறளுக்கும் இசையமைத்தேன். அதில் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என இருக்கும் திருக்குறளில் முதல் கட்டமாக, அறத்துப்பாலை எடுத்துக்கொண்டு, அதிலுள்ள திருக்குறளையும் எஸ.பி.பி., சித்ரா என முன்னணி பாடகர் பாடகிகளை வைத்து பாட வைத்தேன். அதோடு அந்தந்த திருக்குறளின் பொருள்களையும் பதிவு செய்தேன்.