பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மாதவன் நடித்த ரன் படத்தில் காதல் பிசாசே, திருடா திருடியில் மன்மதராசா, சந்திரமுகியில் கொஞ்ச நேரம், சண்டக்கோழியில் தாவணி போட்ட தீபாவளி என ஹிட் பாடல்களாக எழுதத் தொடங்கி தற்போது கோலிவுட்டில் ஒரு முன்னணி பாடலாசிரியராக இருப்பவர் யுகபாரதி. சமீபகாலமாக இமானின் இசையில் மைனா, கும்கி என தொடர்ந்து ஹிட் பாடல்களாக எழுதி வருகிறார்.
அதோடு, ஜேம்ஸ்வசந்தன் இயக்கி இசையமைத்துள்ள வானவில்வாழ்க்கை என்ற படத்திலும் இவரது பாடல் ஒன்று இடம் பெற்றிருக்கிறது. ஆனால் அந்த பாடல் இப்போது எழுதியதில்லையாம். 1999ல் கணையாழியில் வேலை செய்தபடி சினிமாவில் பாடல் எழுதிக்கொண்டிருந்த யுகபாரதி, அந்த சமயததில் ஜேம்ஸ்வசந்தனையும் சந்தித்து பாடல் எழுத வாய்ப்பு கேட்டாராம். அப்போது ஒரு கிராமத்து வாசனைகளை சொல்லும்விதமாக அமைந்த ஒரு பாடலை எழுதி கொடுத்திருந்தாராம்.
அந்த பாடல் ஜேம்ஸ்வசந்தனுக்கு அதிகமாக பிடித்துவிட, தான் இசையமைத்த படங்களின் இயக்குனர்களிடம் அந்த பாடலை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டு வந்திருக்கிறார். ஆனால், அதற்கான சூழல் அமையாததால் எந்த இயக்குனர்களும் அந்த பாடலை பயன்படுத்தவில்லையாம். அதனால், தற்போது அந்த பாடலை வானவில் வாழ்க்கை படத்துக்காக பயன்படுத்தியிருக்கிறார் ஜேம்ஸ்வசந்தன்.