பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மிஷ்கின் இயக்கத்தில் வெளியான படம் சித்திரம் பேசுதடி. இந்த படத்தில் வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம் என்ற பாடலை பாடியவர் கானா உலகநாதன். அதோடு அந்த பாடலில் அவரே நடித்தும் இருந்தார். அவருடன் நடிகை மாளவிகாவும் குத்தாட்டம் ஆடியிருந்தார். அப்பாடல் மெகா ஹிட்டானது.
ஆனால், அத்தனை பெரிய ஹிட் பாடலை பாடிய கானா உலகநாதன் அதன்பிறகு எந்த பாடலையும் பாடவில்லை. அவருக்கு அடுத்து என்ட்ரியான கானா பாலா ஏராளமான பாடல்களை பாடிக்கொண்டிருக்கிறார். அதோடு பாடல்கள் எழுதி, நடனமும் ஆடி வருகிறார். ஆடிப்போனா ஆவணி, நடுக்கடலுல, காசு பணம் துட்டு மணி மணி என்று அவரது ஹிட் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.
இந்த நிலையில், வசந்த என்கிற புதியவர் இயக்கும் நாடகமேடை என்ற படததில் இணைந்து நடிக்கின்றனர். அதோடு, ஒரு பாடலில் அயிட்டம் நடிகையுடன் இருவரும் இணைந்து குத்தாட்டமும் ஆடுகின்றனர். பெண்தான் உலகம் என்று வர்ணித்து எழுதப்பட்டுள்ள அந்த பாடலை கவிஞர் ஜெயங்கொண்டான் எழுதியுள்ளார்.
இதற்கு முன்பு, ஒரு சந்திப்பில, வேடப்பன், சோக்குசுந்தரம் உள்பட பல படங்களில் பாடல்கள் எழுதியுள்ள அவர், இந்த பாடல் பற்றி கூறும்போது, பெண்தான் உலகம் என்றொரு சூழலில் இந்த பாடலை எழுத வேண்டும் என்று டைரக்டர் சொன்னார். அதனால் பெண்ணை எப்படியெல்லாம் வர்ணிக்க முடியுமோ அந்த அளவுக்கு அவர்கள் போட்டிபோட்டு வர்ணிப்பது போன்று இந்த பாடலை எழுதியிருக்கிறேன். அதோடு, எத்தியோபியா, கென்யா, சோமாலியா,உகாண்டா என மொத்தம் 64 நாடுகளின் பெயர்களை இந்த பாடலில் கொண்டு வந்திருக்கிறேன். இது தமிழ் சினிமாவுக்கு புதுமையான பாடலாக இருக்கும் என்கிறார் ஜெயங்கொண்டான்.