பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'லிங்கா' திரைப்படத்தை வாங்கிய விதத்தில் சுமார் 40 சதவீதம் நஷ்டம் ஏற்பட்டது எனக் கோரி படத்தை வாங்கிய சில வினியோகஸ்தர்கள் உண்ணாவிரதம் இருக்கத் தயாராகி வருகிறார்கள். இதற்கு முன் பல நடிகர்கள் நடித்த பல படங்கள் வெளியாகி நஷ்டம் ஏற்பட்ட போது உண்ணாவிரதம், போராட்டம் என நடத்தாதவர்கள் ரஜினிகாந்த் படத்திற்கு மட்டும் நஷ்டம் என்றால் கொடியைப் பிடிப்பது ஏன் என்று ரஜினி ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அஜித் நடித்த எத்தனையோ படங்கள் இதற்கு முன் பலத்த நஷ்டத்தைச் சந்தித்துள்ளன. விஜய் நடித்து ஒரு காலத்தில் தொடர்ச்சியாக ஐந்தாறு படங்கள் ஓடவேயில்லை. கமல்ஹாசன் நடித்த சில படங்கள் மாபெரும் தோல்விப் படங்களாக அமைந்த போதும் கூட இப்படி யாரும் செய்ததில்லை.
ரஜினி நடித்த படங்கள் அளவுக்கதிகமான லாபத்தைத் தந்த போது அந்த லாபத்தில் ஒரு பங்கை ரஜினிகாந்திற்கா அவர்கள் கொடுத்தார்கள் என்றும் ரஜினியின் ரசிகர்கள் போராட்டம் நடத்துபவர்களைப் பார்த்துக் கேட்கிறார்கள். இதற்கு முன் 'பாபா' படம் தோல்வியடைந்த போது ரஜினிகாந்த் வினியோகஸ்தர்களை அழைத்து ஒரு குறிப்பிட்டத் தொகையை நஷ்ட ஈடாகக் கொடுத்தார். அந்தப் படத்திற்கு அவர் கதை எழுதியதால் அப்படிச் செய்தார். அடுத்து 'குசேலன்' படம் வெளிவந்து தோல்வியடைந்த போதும் அதையே செய்தார். அந்தப் படத்தில் ரஜினிதான் ஹீரோ என்ற ஒரு தோற்றத்தை தயாரிப்பாளர்கள் விளம்பரங்கள் மூலம் ஏற்படுத்திவிட்டனர். அதனால், நஷ்டத் தொகையை ரஜினிகாந்த் கொடுத்தார் என திரையுலகினரே சொல்கிறார்கள்.
இப்போது 'லிங்கா' படம் ஓடவில்லை என்று சொல்கிறார்கள். படத்தின் முதல் நாளில் மட்டுமே 200 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை பல இடங்களில் டிக்கட் கட்டணத்தை நிர்ணயித்திருக்கிறார்கள். முதல் இரண்டு மூன்று நாட்களுக்கு அந்தத் தொகைதான் கட்டணமாக இருந்துள்ளது. அதன் பின்தான் அரசாங்கம் நிர்ணயித்த கட்டணத்திற்கு டிக்கட் விலையை நிர்ணயம் செய்துள்ளார்கள்.
இந்தப் பிரச்சனைக்கு ஒரே தீர்வு, படத்தின் வசூல் எவ்வளவு என சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் அல்லது படத்தை வாங்கி வெளியிட்ட ஈராஸ் நிறுவனம் அல்லது வேந்தர் மூவீஸ் ஆகியோரில் யாராவது ஒருவர் இதற்கு சரியான விளக்கத்தைக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் படம் வசூலித்த்த் தொகை என்பதைப் பற்றிய சந்தேகம் தீர்ந்து இதற்கான சரியான தீர்வு கிடைக்கும்.
இதனிடையே, படத்தின் பிரச்சனையைத் தீர்க்க திரை மறைவில் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வேந்தர் மூவீஸ் நிறுவனத்திற்கு அடுத்து ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடித்துக் கொடுக்கவும் சம்மதித்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். மேலும், 'லிங்கா' படத்தை தற்போது வாங்கிய பல வினியோகஸ்தர்கள் முதல் முறையாக ஒரு படத்தை வாங்கி வினியோகம் செய்பவர்கள் என்றும் அனுபவக் குறைவு காரணமாகவே அவர்கள் இந்தப் பிரச்சனையில் சிக்கிக் கொண்டுள்ளார்கள் என்றும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு பிரச்சனையில் சிக்கிக் கொண்டுவிட்டார்கள் என்றே அவர்களைப் பற்றிப் பேசிக் கொள்கிறார்கள்.
பிரச்சனை பலவிதமாக 'லிங்கா' பிரச்சனையில் தேவையில்லாமல் ரஜினியின் தலையை உருட்டுவதை ரஜினியின் ரசிகர்கள் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.