ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பொல்லாதவன், ஆடுகளம் போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் வெற்றிமாறன். அதோடு தேசிய விருதையும் பெற்றவர். இருப்பினும் மூன்றாவதாக சிம்புவை வைத்து வடசென்னை என்ற படத்தை இயக்கயிருந்த அவர், பின்னர் அந்த படத்தையே கிடப்பில் போட்டு விட்டார். அதன்பிறகும் சில ஆண்டுகளாக படம் இயக்காமல் இருந்த அவர், சில படங்களை தயாரிப்பதிலும், வசனம் எழுதுவதிலும் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில்தான், தனுசுடன் இணைந்து காக்கா முட்டை என்ற படத்தை தயாரித்தார். தற்போது விசாரணை என்ற படத்தை அட்டகத்தி தினேஷ்- ஆனந்தியை வைத்து இயக்கி வருகிறார். இதையடுத்து தனுஷ்-பார்த்திபன் நடிப்பில் சூதாடி என்ற படத்தை இயக்கப்போகிறார்.