டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சூர்யா ஜோடியாக நயன்தாரா மீண்டும் 'மாஸ்' படத்தில் நடித்து வருகிறார். இப்போதெல்லாம் நயன்தாரா படப்பிடிப்புக்கு வந்தால் யாருடனும் பேசுவதில்லையாம், புத்தகமும் கையுமாகத்தான் இருக்கிறாராம். நயன்தாராவை ஒரு படிப்பாளியாக மாற்றிய பெருமை ஜோதிகாவையே சாரும் என்கிறார்கள். முன்பெல்லாம் படப்பிடிப்பு இடைவேளைகளில் நயன்தாரா மொபைல் போனுடன்தான் அதிக நேரத்தைச் செலவழிப்பாராம். ஆனால், தற்போது புத்தகத்தை கையில் எடுத்துக் கொண்டு உட்கார்ந்த விடுகிறாராம்.
புத்தகத்தை படிப்பதன் மூலம் மனதிற்கும், மூளைக்கும் நிம்மதியாக இருக்கும் என ஜோதிகாதான் நயன்தாராவிற்கு அட்வைஸ் செய்தாராம். அதோடு நிற்காமல் ஒரு புத்தகத்தைக் கொடுத்து அதை இரண்டு நாட்களில் படித்து முடிக்க வேண்டும் என்று சொன்னாராம். ஆனால், அப்படி இரண்டு நாட்களில் அந்த புத்தகத்தை படித்து முடிக்கவில்லையென்றாலும், புத்தகம் படிப்பதால் ரிலாக்ஸ் ஆக இருக்க முடிகிறது என்பதை நயன்தாரா உணர்ந்தாராம்.
புத்தகத்தைப் படிப்பதன் மூலம் கவனம் அதிகரித்திருப்பதாகவும், எப்போதாவது ஒரு முறைதான் வசனம் பேசுவதில் கூட தவறு நடக்கிறது என்றும் நயன்தாரா பெருமைப்படுகிறாராம். ஒரு நல்ல புத்தகத்தை விட வேறு நல்ல நண்பன் இருக்க முடியாது என சீக்கிரமே நயன்தாரா சொல்வார் என எதிர்பார்க்கலாம். ஜோதிகா இப்படி நயன்தாராவை மாற்றியதற்கும் ஒரு எச்சரிக்கை உணர்வும் காரணமா இருக்கலாம் இல்லையா...?