டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஐ படத்திற்கு ஏற்பட்ட பிரச்னை சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளது, இதனையடுத்து திட்டமிட்டபடி படம் ஜனவரி 14ம் தேதி ரிலீஸாகிறது. ஆஸ்கர் பிலிம், ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், விக்ரம்-எமி நடிப்பில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக பிரமாண்டமாக உருவாகி வந்த படம் ஐ. இப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 14ம் தேதி ரிலீஸாக இருந்தது. இப்படத்தை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென நேற்று இப்படத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
பிக்சர்ஸ் ஹவுஸ் மீடியா என்ற நிறுவனத்திடம் ஆஸ்கர் ரவிச்சந்திரன், வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் அந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட், 3வார காலத்திற்கு இப்படத்தை ரிலீஸ் செய்ய தடைவிதித்து இருந்தது. மேலும் இதுதொடர்பாக ஜன. 30ம் தேதிக்குள் ஆஸ்கர் ரவிச்சந்திரன் விளக்கம் தரும்படியும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இப்பிரச்னை தொடர்பாக சம்பந்தப்பட்ட இருவரும் சுமூகமாக பேசி தீர்த்துள்ளனர். இதனையடுத்து படம் வௌியாவதில் எந்த சிக்கலும் இல்லை என்றும், திட்டமிட்டபடி ஐ படம் ஜன.,14ம் தேதி ரிலீஸாகும் என ஆஸ்கர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.