மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஊர்களின் பெயர்களில் படங்களை எடுத்து ஊரரசு என்று அழைக்கப்பட்டு வருபவர் டைரக்டர் பேரரசு. அந்த வகையில், திருப்பதி, சிவகாசி, தர்மபுரி, திருத்தணி, பழனி, திருவண்ணாமலை போன்ற படங்களை இயக்கிய இவர், தற்போது திகார் என்ற படத்தை தமிழ், மலையாளத்தில் இயக்கியிருக்கிறார். அதோடு, திகார் ஜெயிலில் பணியாற்றிய கிரண்பேடியை அப்படத்தின் ஆடியோ விழாவுக்கு சென்னைக்கு அழைத்து வந்தும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆனால், அவர் படத்தை வெளியிடும் நேரத்தில் முக்கிய ஹீரோக்களின் படங்கள் திரைக்கு வரத் தொடங்கியதால் சரியான நேரம் பார்த்து வெளியிட வேண்டும் என்று காத்திருக்கிறார் பேரரசு. அதோடு, திகார் படத்தின் வெற்றி தோல்விகளை எதிர்பார்த்து காத்திருக்க விரும்பாமல், தனது அடுத்த பட வேலைகளிலும் தற்போது அவர் இறங்கிவிட்டார்.
அந்த வகையில், இந்த புதிய படமும் அவரது வழக்கமான பாணியில் ஒரு அதிரடியான ஆக்சன் கதையில்தான் தயாராகிறதாம். ஒரு பிரபலமான ஊரின் பெயரில்தான் அந்த படத்திற்கும் அவர் டைட்டில் வைக்க இருப்பதாகவும் கூறப்படும் அதே வேளையில், பேரரசு இயக்கும் புதிய படத்திலும் திகார் படத்தைப்போன்று புதுமுகங்களே நடிக்கிறார்களாம்.