பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தாவும், முன்னணி நடிகராக இருந்து வரும் சித்தார்த்தும் காதலிப்பதாக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஹைதராபாத்தில் நடைபெற்ற சில திரைப்பட விழாக்களிலும், சில மாதங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற 'காவித் தலைவன்' திரைப்பட விழாவிலும் சமந்தா கலந்து கொண்டு அவர்களிருவருக்குமிடையே காதல் இருக்கிறதோ என மற்றவர்களையும் சந்தேகப்பட வைத்தது. இருவரும் காளஹஸ்தி கோயிலுக்குக் கூட சென்று ஒன்றாக பூஜைகளையும் செய்தனர்.
இதனிடையே, இன்று ஹைதராபாத்திலிருந்து வெளிவரும் ஒரு ஆங்கிலப் பத்திரிகை சமந்தா, சித்தார்த் இருவரும் பிரிந்து விட்டதாக செய்தி ஒன்றை வெளியிட்டது. பிரிவிற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்றும், சமந்தாதான் மிகவும் பாதிக்கப்பட்டுவிட்டார் என்றும் சொல்லப்பட்டுள்ளது. சமந்தாவிற்கு தற்போது பல நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருவதாகவும் அதனால், அவர் நடிப்பில் அதிக கவனம் செலுத்தப் போகிறார் என்றும் தெரிகிறது என செய்தி வெளியாகியுள்ளது. இப்படி வெளிவந்த செய்தியைப் பார்த்து சமந்தா கடும் கோபமடைந்து அவருடைய டிவிட்டர் வலைத்தளத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
“இன்று பத்திரிகையில் வந்த செய்தி என்னை பாதிக்கப்பட்டவராக காட்டியுள்ளது. அப்படியெல்லாம் இல்லை. சித்தார்த் ஒரு நல்ல மனிதர். இப்படிப்பட்ட ஒரு சார்பான செய்திகளை வெளியிடுவதை மீடியாக்கள் நிறுத்த வேண்டும். இது தனிப்பட்ட விஷயம், ஸ்டாப்”, எனக் குறிப்பிட்டுள்ளார்.
சித்தார்த் நேற்று அவருடைய டிவிட்டரில் ஒரு பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார். அதில், “2015ம் ஆண்டு பல ஆச்சரியங்கள் நிறைந்து காணப்படுகிறது. புதிய அறிவிப்புகள் விரைவில் வெளிவரும். 2014ம் ஆண்டின் உத்வேகம் இந்த ஆண்டிலும் தொடரும் என நம்புகிறேன். உங்கள் அன்புக்கு நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை வெளியான பத்திரிகைச் செய்திக்கு சமந்தா உடனடியாக கருத்து தெரிவித்துள்ள நிலையில், சித்தார்த் அது பற்றி இன்னும் எதுவும் சொல்லாமல் இருக்கிறார்.