மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
முதன் முறையாக ஆர்யா போலீஸ் அதிகாரியாக நடித்த மீகாமன் படம் சமீபத்தில் வெளியானது. தற்போது ஆர்யாவின் தம்பி சத்யா நடித்துவரும் எட்டுத்திக்கும் மதயானை படத்தில் அவரும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். "போலீஸ் என்பது பொறுப்பு, அது அதிகாரமாக மாறும்போதுதான் பிரச்னைகள் ஆரம்பமாகிறது" என்கிற ஒன்லைனில் உருவாகி இருக்கிறது எட்டுத்திக்கும் மதயானை.
தமிழ்நாட்டில் நடந்த முக்கிய க்ரைம் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகி இருக்கிறது. போலீசால் நிகழ்த்தப்படும் கொடூரங்கள். போலீசுக்கே நடக்கும் கொடூரங்கள் என காதலும் ஆக்ஷனும் கலந்த படமாக உருவாகி இருக்கிறது. ராட்டினம் படத்தை இயக்கிய தங்கசாமி சொந்தமாக தயாரித்து இயக்கி உள்ள படம். சத்யாவுக்கு ஜோடியாக ஸ்ரீமுகி என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். மெட்ராஸ் கலையரசன் சத்யாவின் நண்பனாக நடித்துள்ளார். மது ரமேசன் என்ற புதுமுகம் இசை அமைத்துள்ளார். ஆர்.ஜே.ஜெய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த இந்தப் படம் தற்போது வெளிவர தயார் நிலையில் இருக்கிறது. இந்த மாத இறுதி அ£ல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாகிறது. ஆர்யாவின் தம்பி சத்யா முதலில் நடித்த படித்துறை படம் வெளிவரவில்லை. அடுத்து நடித்த புத்தகம், அமரகாவியம் படங்கள் கை கொடுக்கவில்லை. அதனால் இந்தப் படத்தை பெரிதும் நம்பிக் கொண்டிருக்கிறார் சத்யா.