தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சென்னை : லிங்கா பட வினியோகஸ்தர்கள் உண்ணாவிரதம் தொடர்பான வழக்குகளில், போலீஸ், வரும் 9ம் தேதி காலை, 11 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ரஜினி நடித்த, லிங்கா படம், டிச., 12ம் தேதி ரிலீசானது. இதில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய கேட்டு, சென்னையில் உண்ணாவிரதம் இருக்க, போலீசார் அனுமதி வழங்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தஞ்சை, திருச்சி ஏரியா வினியோகஸ்தர் சிங்காரவேலன் சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு போலீஸ் தரப்பில் அவகாசம் கோரப்பட்டிருந்தது. இந்நிலையில், மேலும் விஜயபாரகவி எண்டர்டெயின்மெண்ட், கேப்ரிகான் பிக்சர்ஸ் மற்றும் சுக்ரா பிலிம்ஸ் நிறுவனங்கள், உண்ணாவிரதத்திற்கு அனுமதி கோரி வழக்குகளை தாக்கல் செய்தது. இந்த 4 வழக்குகளிலும், வரும் 9ம் தேதி, காலை 11 மணிக்குள், சென்னை போலீஸ் முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதி சிவஞானம் உத்தரவிட்டுள்ளார்.