பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் ஆர்யா. இவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'மீகாமன்' திரைப்படம் சுமாராக ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் நடிப்புத் தொழிலில் பிஸியாக இருக்கும் ஆர்யா, 'தி ஷோ பீப்பிள்' என்ற அவரது சொந்த பட நிறுவனத்தின் மூலம் 'அமரகாவியம்' திரைப்படத்தையும், 'பாஸ் என்கிற பாஸ்கரன், ஜீவா' ஆகிய திரைப்படங்களையும் வாங்கி வெளியிட்டார்.
தற்போது மலையாளத்தில் நடிகர் பிருத்விராஜ், 'இனம்' படத்தை இயக்கிய சிக்கலில் சிக்கிய பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், ஷாஜி நடேசன் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ள ஆகஸ்ட் சினிமா என்ற பட நிறுவனத்தில் பங்குதாரர் ஆக இணைந்துள்ளார். ஆர்யாவும், பிருத்விராஜும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் ஆர்யாவின் தாய்மொழி மலையாளம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஆகஸ்ட் சினிமா நிறுவனம் தற்போது லிஜோ ஜோஸ் பெலிசேரி இயக்கத்தில் உருவாகி வரும் 'டபுள் பேரல்' என்ற படத்தைத் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் பிருத்விராஜ், ஆர்யா, இந்திரஜித், சுவாதி, இஷா ஷர்வானி மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். தமிழைத் தொடர்ந்து தற்போது மலையாளத்தில் ஆர்யா தயாரிப்பாளர் ஆகியுள்ளார்.