ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இயக்குநர் பாலசந்தரின் 13ம் நாள் நினைவு அஞ்சலி, சென்னையில் இன்று அனுசரிக்கப்பட்டது. நடிகர் ரஜினிகாந்தின் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்டோரும், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, பிரமிட் நடராஜன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இயக்குநர் பாலச்சந்தர், கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் 23ம் தேதி காலமானார். அவருக்கு மரியாதை செலுத்தும்விதமாக, மறுநாள் (24ம்தேதி), சினிமா, சீரியல் சூட்டிங் உள்ளிட்ட திரைப்படத்துறை பணிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. பாலசந்தரின் இறுதிச்சடங்கில், இளையராஜா, ரஜினி, பாரதிராஜா உள்ளிட்ட திரைத்துறையினர் அனைவரும் பங்கேற்றனர். உத்தமவில்லன் படத்தின் பணிகளுக்காக, கமல் வெளிநாட்டில் இருந்ததால், அவர் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளவில்லை. சமீபத்தில் சென்னை திரும்பிய கமல், பாலசந்தரின் வீட்டிற்கு நேரடியாக சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.