வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் அகுடி பிரசாத் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் காலமானார். கடந்த சில மாதங்களுக்கு முன் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட இவர் ஹைதரபாத் கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்த பிரசாத் இன்று காலை காலமானார்.
ஆந்திராவிலுள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் குடூர் எனும் ஊரில் பிறந்த இவரது இயற்பெயர் அடுசிமில்லி ஜனார்தன வர பிரசாத் என்பதாகும். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தெலுங்கில் இயக்குநர் மதுசூதன் ராவ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படத்தில்தான் இவர் அறிமுகமானார். மேலும் அதே படத்தில்தான் நாகார்ஜுனாவும் தெலுங்கு சினிமாவில் அவரது பயணத்தை தொடங்கினார். இதுவரை கிட்டத்தட்ட 300 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். தமிழில் வேட்டையாடு விளையாடு, நிமிர்ந்துநில் படத்திலும் இவர் நடித்திருக்கிறார்.
தெலுங்கு சினிமாவின் உயர்ந்த விருதான நந்தி விருதையும் இவர் 2 முறை பெற்றிருக்கிறார். வில்லனாக ”நேனு நின்னி ப்ரேமிஸ்தானு” படத்திற்காகவும், குணச்சித்திர நடிகராக ”சந்தமாமா” படத்திற்காகவும் இவ்விருதை பெற்றிருக்கிறார். அகுடி பிரசாத் நடித்த கடைசி திரைப்படம் ரவுடி ஃபெலோ(Rowdy Fellow). இரண்டு நாட்களுக்கு முன் தான் அகுடி பிரசாத் அவரது பிறந்த நாளை குடும்பத்துடன் மருத்துவமனையில் கொண்டாடியிருக்கிறார். அகுடி பிரசாத்தின் இறுதி சடங்குகள் நாளை எஸ்.ஆர்.நகரில் உள்ள மயானத்தில் நடக்கவுள்ளது.