பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
தீக்குச்சி, பேராண்மை, மாப்பிள்ளை, மீகாமன் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் எஸ்.ஆர்.சதீஷ்குமார். மீகாமன் படத்தின் ஒளிப்பதிவு ஓவியங்களை அடிப்படையாக வைத்து செய்யப்பட்டது என்கிறார். மேலும் அவர் கூறியதாவது: மீகாமன் அண்டர்வேல்ட் தாதாக்களின் கதை என்பதால் அதற்கு ஒளிப்பதிவில் பெரிய முக்கியத்தும் இருந்தது. படத்தின் காட்சிகள் பாதி இருட்டில்தான் நடக்கும். ஆனாலும் அது ரசிகர்களுக்கு உறுத்தக்கூடாது என்பது சவாலான விஷயம். இதற்காக புகழ்பெற்ற ஓவியர்கள் சிலரின் ஓவியங்களில் கையாளப்பட்டிருக்கும் லைட்டிங்கை வைத்து ஒளிப்பதிவு செய்தேன்.
ஒளிப்பதிவுக்கு சவாலாக இருக்கும் படங்களை தேர்வு செய்து பணியாற்றுகிறேன். அதனால்தான் வருடத்திற்கு ஒரு படத்தில் பணியாற்ற முடிகிறது. இடைவெளி ஏற்படுகிறது. எத்தனை படத்தில் பணியாற்றினோம் என்பது முக்கியமல்ல. எப்படி பணியாற்றினோம் என்பதே முக்கியம். என்கிறர் சதீஷ்குமார்.