'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஆடுகளம் டாப்சிக்கு தமிழ், தெலுங்கு,. இநதி என 3 மொழிகளில் படங்கள் இருந்தபோதும், அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள ஒரே படம் லாரன்சின் முனி -3 கங்கா மட்டும்தானாம். ஆனால், அந்த படத்திலும் அவர் நடிப்பது என்னவோ கொஞ்ச காட்சிகள்தான். பேயாகத்தான் நிறைய காட்சிகளில் நடித்துள்ளாராம். பேயாக நடித்தது வேறு நடிகையாம். இருப்பினும் அதுவும் தனது கதாபாத்திரம் என்பதால் படம் முழுக்க வந்தது போன்ற பீல் இருக்குமாம்.
அதனால்தான், கங்கா படத்தை மூச்சுக்கு முன்னூறு தடவை பேசி வருகிறார் டாப்சி. அதற்கடுத்து தமிழில் அவர் நடித்துள்ள வை ராஜா வை படத்தில் சஸ்பென்ஸ் வேடமாம். ஆனால் க்ளைமாக்ஸ் நேரத்தில் ஓப்பனாகும் அவரது வேடம் வில்லியாக சித்தரிக்கப்பட்டுள்ளதாம். அதோடு சிங்கப்பூர் கப்பலில் அவர் நடனமாடும் ஒரு ஜாலியோ ஜிம்கானா பாடலும் உளளதாம்.
ஆக, ஒருவழியாக வித்தியாசமாக காட்டுகிறேன் என்று சொலலி டாப்சியை வில்லியாக்கி விட்டாராம் ஐஸ்வர்யா தனுஷ். இந்த விவரம் கோலிவுட்டில் கசிந்ததை அடுத்து, வில்லி வேடத்துக்கு நடிகை தேடிக்கொண்டு திரிந்த சில டைரக்டர்கள் டாப்சியை அணுகி வருகிறார்களாம். ஆனால் அவர்கள் சொன்ன கதைகளோ, சொர்ணாக்கா ரேஞ்ச் கேரக்டர்களாம். அதைக்கேட்டதில் இருந்து பஞ்சு மிட்டாய் போன்று சுருங்கிப்போயிருக்கிறாராம் டாப்சி.