டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
யான் படத்தின் படு தோல்வி காரணமாக ஜீவாவை வைத்து படம் எடுக்க யாருமே தயாராக இல்லை. எனவே, கடும் மன உளச்சலுக்குள்ளானார் ஜீவா. வெளியே எங்கும் போகாமல், நண்பர்கள் யாருடனும் பேசாமலும், மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன் என்று மனசுக்குள் பேசிக் கொண்டு வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்திருக்கிறார்.
இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட நடிகர் விஷால், ஜீவாவை பிசியாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் வகித்த சென்னை ரைனோஸ் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை ஜீவாவுக்கு வழங்க சிபாரிசு செய்திருக்கிறார். சிசிஎல் போட்டி விரைவில் நடைபெற உள்ளதால் தினமும் கிரிக்கெட் பிராக்ட்டீஸ் செய்து வருகிறாராம் ஜீவா. பகலில் தன் மனைவி நடத்தும் ஒன் எம்பி உணவகத்திற்குப்போய் டைம்பாஸ் பண்ணி வருகிறார்.
சிவ மனசுல சக்தி படத்தை இயக்கிய ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரித்து நடிக்க திட்டமிட்டிருந்த ஜீவா, யான் படத்தின் மீதுள்ள நம்பிக்கை காரணமாக, ராஜேஷ் படத்தில் நடிக்க முடியாது என்று அவரை அவமானப்படுத்தி அனுப்பினார். காலம் மாறியது. ஜீவா தற்போது பட வாய்ப்பில்லாமல் வீட்டில் உட்கார்ந்திருக்கிறார். இந்நிலையில் ராஜேஷை சந்தித்து பழசை மறந்துவிட்டு என்னை வைத்து ஒரு படம் பண்ணுங்கள் என்று கேட்டிருக்கிறார் ஜீவா. தற்போது ஆர்யா, தமன்னா நடிக்கும் வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் ராஜேஷ். இப்படம் முடிவடைந்ததும், பார்க்கலாம் என்ற பதில் சொல்லி அனுப்பினாராம் ராஜேஷ்.