இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை |
இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் ஏ.ஆர்.ரகுமான். தமிழ், இந்தி ஆகிய இரு இந்திய மொழிகளில் இசையமைத்துக் கொண்டும், சில ஹாலிவுட் படங்களுக்கும், இசையமைத்து வருகிறார். தமிழில், மணிரத்னம் இயக்கும் 'ஓகே கண்மணி', இந்தியில் 'சாத் இந்துஸ்தானி, தமாஷா, மொகஞ்சதாரோ,” ஆகிய படங்களுக்கும், ஆங்கிலத்தில் 'பீலே', அராபிய, ஆங்கில மொழியில் தயாராகும் 'முகம்மது' ஆகிய படங்களுக்கும் இசையமைக்கிறார்.
மாதத்தில் பாதி நாட்கள் இந்தியாவிலும், பாதி நாட்கள் அமெரிக்காவிலும் என பறந்து கொண்டேயிருக்கிறார். விமானப் பயணத்தின் போது கூட ரகுமான், கிடைக்கும் நீண்ட நேரத்தில் அவருடைய இசை வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறார். ஒரு லேப் டாப், குட்டி ஆடியோ மிக்ஸர், ஹெட் போன் என சின்னச் சின்ன வசதிகளுடனும் அவர் தனது வேலையை செய்து கொண்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது.
“ஒரு நீண்ட பயணத்தின் போது, மிக உயரத்தில் என்னுடைய மிகச் சிறிய ஸ்டுடியோவின் புகைப்படம்', என பதிவு செய்து அந்த புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் மீண்டும் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.