தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஹீரோ வாய்ப்புகள் குறையத் தொடங்கியதும் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக தன்னை மாற்றிக்கொண்டவர் பிரபு. சில படங்களில் வில்லன், சில படங்களில் அப்பா கேரக்டர் என மாறி மாறி நடித்து வருபவர், சுந்தர்.சி இயக்கும் ஆம்பள படத்தில் விஷாலின் அப்பாவாக நடித்திருக்கிறார். இதற்கு முன்பு விஷால் நடித்த சில படங்களில் ராஜ்கிரண் உள்ளிட்ட சில அப்பாக்கள் கண்டிசன் பேர்வழிகளாக நடித்திருந்தனர்.
ஆனால், இந்தப்படத்தைப்பொறுத்தவரை ரொம்ப ஜாலியான அப்பாவாக நடித்துள்ளாராம் பிரபு. குறிப்பாக, தனது மகன்களான விஷால், வைபவ் ஆகியோரை அவர்களின் முறைப்பெண்ணை காதலிக்க சொல்லி அனுப்புவதே அவர்தானாம். அதையடுத்து தங்களது அத்தை மகள்களை காதலிக்க சென்ற இடத்தில் என்னென்ன விசயங்களை அவர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் கதையாம்.
சுந்தர். சி படம் என்றாலே கலகலப்புக்கு பஞ்சமிருக்காது.அந்த வகையில், இந்த படத்திலும் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறாராம். அதிலும் சமீபகாலமாக ஆக்சன் கதைகளாக நடித்து வரும் விஷாலையே காமெடியனாக்கியிருக்கிறாராம். கூடவே மீகாமன் படத்தில் தனது காமெடி நடிப்புக்கு பிள்ளையார் சுழி போட்ட ஹன்சிகாவும் அவருக்கு இணையாக காமெடியாக நடித்துள்ளாராம். இவர்களுடன் பிரபு, ரம்யாகிருஷ்ணன், சந்தானம், சதீஷ் என பலரும இணைந்திருப்பதால், இதுவரை சுந்தர்.சி இய்ககிய படங்களின் காமெடியை மிஞ்சும் வகையில் இந்த படம் முழுக்க காமெடி களைகட்டியுளளதாம்.