ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'வாகை சூடவா', 'மௌனகுரு', 'அம்மாவின் கைபேசி' படங்கள் உட்பட பல தமிழ்ப்படங்களில் நடித்தவர் இனியா. பெயருக்கேற்ப இனியவர்தான். ஆனால் தொடர்ந்து பட வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்கவில்லை. எனவே சில படங்களில் ஒரு பாட்டுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். காசுக்காகத்தான் கவர்ச்சியாட்டம் போட்டார் என்றாலும், அதுவே இனியாவுக்கு எதிராக அமைந்துவிட்டது. போதாக்குறைக்கு நான் சிகப்பு மனிதன் படத்தில் அவர் நடித்த நெகட்டிவ் கேரக்டரும் நெகட்டிவ்வாகிவிட்டது. இதுபோன்ற காரணங்களால் தமிழில் ஏறக்குறைய மார்க்கெட் இழந்த நடிகையாகிவிட்டார் இனியா. அவர் கதாநாயகியாக நடித்த 'இரண்டாவது படம்', 'ஜித்தன் 2' 'கரையோரம்' ஆகிய படங்களும் வெளிவராமல் முடங்கிக் கிடக்கின்றன. எனவே வேறு வழியில்லாமல் தன் தாய்மொழியான மலையாளத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் இனியா.
ஆனாலும் சொல்லிக்கொள்ளும்படியான படங்கள் அங்கேயும் கிடைக்கவில்லை. தற்போது ஒரு ஹாரர் படத்தில் பேயாக நடிக்கிறார் இனியா. 'கேர்ள்ஸ்' என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் இனியாவுடன் முக்தா, அனுஸ்ரீ, அபர்ணா நாயர் முதலானோரும் நடிக்கிறார்கள். பிரபல இயக்குநர் துளசி தாஸ் இயக்கும் மலையாள படம் இது.
தமிழில், ஏற்கனவே மாசாணி என்ற படத்தில் இனியா பேயாக நடித்தது குறிப்பிடத்தக்கது.