விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
பிகே படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், அமீர் கான் நடிப்பில் வெளியாகி வசூலில் சாதனை படைத்துள்ள பிகே படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. யோகா குரு பாபா ராம்தேவும், இப்படத்தை தடை செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தார்.
பட்னாவிஸ் ஆதரவு : பிகே படம் தொடர்பாக, மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் கூறிய கருத்துகள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளன. சென்சார் போர்டே, சிறந்த படம் என்று சான்றளித்துவிட்டது. இதற்கு மேல் போராட்டங்கள் நடத்துவது தேவையில்லாத ஒன்று. பிகே படம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்பது பணத்தை வீணாக்கும் செயல் என்று, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ப்டனாவிஸ் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில், பிகே படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று பட்னாவிஸ் கூறினார்.