ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம் (சிகா) ஆண்டுதோறும் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கி வருகிறது. அந்த வரிசையில் 10வது சைக்கா விருது வழங்கும் விழா வருகிற ஜனவரி 9 மற்றும் 10ம் தேதிகளில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலில் நடக்கிறது. இதுவரை தமிழ் படங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த சைக்கா விருதுகள் இந்த ஆண்டு முதல் இந்திப் படங்களுக்கும், சின்னத்திரை கலைஞர்களுக்கும் வழங்கப்படுகிறது.
விருதுக்குரிய கலைஞர்களை தேர்வு செய்ய இயக்குனர் பாரதிராஜா தலைமையில் நடுவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் இயக்குனர்கள் விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, சுரேஷ் கிருஷ்ணா, மற்றும் ஒளிப்பதிவாளர்கள் மது அம்பாட், என்.கே.விஸ்வநாதன், ராபர்ட், இசை அமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.