தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தாய்மேல் ஆணை என்ற படத்தில் அறிமுகமான ஆனந்த் ராஜ், அதன்பிறகு ஒருவர் வாழும் ஆலயம், என் தங்கச்சி படிச்சவ, புலன் விசாரணை, பாலைவனப்பறவைகள் என பல படங்களில் நடித்தார். ஆனால் இவர் கதாநாயகனாக நடித்த படங்கள் வெற்றி பெறாததால் பின்னர் வில்லனாக தனது ரூட்டை மாற்றிக்கொண்டார். ஆனால் சரத்குமாருடன் சூர்யவம்சம் படத்தில் நடித்த பிறகு ஆனந்தராஜிற்கான பட வாய்ப்புகள் படிப்படியாக குறையத் தொடங்கியது. இருப்பினும் அத்னபிறகு பேரரசு, போக்கிரி என சில படங்களில் நடித்து வந்த அவர், இந்தியில் பிரபுதேவா இயக்கிய ஆக்சன் ஜாக்சன் படத்திலும் வில்லனாக நடித்தார்.
இந்தநிலையில், தற்போது தமிழில் விஜயசேதுபதி-நயன்தாரா நடித்து வரும் நானும் ரெளடிதான் படத்தில் அதிரடி வில்லனாக நடிக்கிறார் ஆனந்தராஜ். இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க இந்தியில் இருந்து யாராவது பிரபல வில்லனை இறக்குமதி செய்யலாம் என்று அப்படத்தை தயாரிக்கும் தனுஷ் யோசித்தபோது, இந்தியில் ஆக்சன் ஜாக்சன் படத்தில் நடித்திருந்தாரே வில்லன் நடிகர் அவரை நடிக்க வைக்கலாமே என்று அவரது யூனிட்டில் உள்ள ஒருவர் கிண்டலாக சொல்லியிருக்கிறார்.