ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சினேகாவின் காதலர்கள் படத்தை இயக்கிய முத்துராமலிங்கம், கேள்விக்குறி என்ற படத்தை இயக்கிய ஜெய்லானி ஆகிய இருவரும இணைந்து மூவி பண்டிங் நெட் ஒர்க் என்கிற நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். அதன்மூலம் சினிமாவில் ஆர்வம் உள்ளவர்களிடம் நிதி வசூலித்து நல்ல தரமான படஙகளை கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே இதற்கான அறிவிப்பை வெளியிட அவர்கள், நேற்று மாலை மூவி பண்டிங் நெட் ஒர்க்கின் சக்சஸ் பிரஸ்மீட் நடத்தினர். அதோடு, தங்களது முயற்சிக்கு கைகொடுக்க முன்வந்த சிலரையும் மேடையேற்றினர். இந்த நிகழ்ச்சியில் டைரக்டர்கள் கரு.பழனியப்பன், மீரா கதிரவன், ஜெய்லானி, முத்துராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது கரு.பழனியப்பன் பேசும்போது, 1920ம் ஆண்டில், பாரதியார் ஒரு புத்தகம் வெளியிட ஆசைப்பட்டார். அந்த சமயத்தில் காலணா, அரையணா என்று வட்டி விகிதம் இருந்தது. ஆனால் 2 வட்டி கொடுக்க அவர் தயாராக இருந்தபோதும் அவருக்கு யாரும் கடன் கொடுக்க முன்வரவில்லை. அப்போதுதான் இந்த மாதிரியொரு பண்டிங் முறையை பாரதியார் தொடங்கினார். அதாவது தனது நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து ரூ 100, 200 என பணத்தை வசூலித்து மொத்தம் 20 ஆயிரம் ரூபாய் சேர்த்து அந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அப்படித்தான் பாரதியின் அந்த புத்தகம் வெளியிட வேண்டும் என்கிற கனவு அப்போது நனவாகியிருக்கிறது. அதேபோல்தான் இப்போது இந்த மூவி பண்டிங் நெட் ஒர்க்கையை தொடங்கியிருககிறீர்கள். ஆர்வம் உள்ளவர்களால்தான் இந்தமாதிரி திட்டங்கள் கைகூடும். அதனால் பாரதியாரின் கனவு பண்டிங் முறை மூலம் அப்போது நனவானது போன்று இப்போது இந்த இயக்குனர்கள் முத்துராமலிங்கம், ஜெய்லானியின் இந்த முயற்சியும் கண்டிப்பாக கைகூடும் என்றார்.