மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ரஜினியின் மகள் சௌந்தர்யா இயக்கத்தில், ரஜினி, தீபிகா படுகோனே நடிப்பில் 3டி அனிமேஷன் படமாக வௌிவந்த படம் கோச்சடையான். இப்படத்திற்காக, மீடியாஒன் நிறுவனத்திற்கு வங்கிக்கடனுக்காக, திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள ரூ.22.21 கோடியை உத்தரவாத தொகையாக, லதா ரஜினிகாந்த் வழங்கியிருந்தார். கடனை இதுவரை திரும்ப கட்டாததால், திருமுடிவாக்கம் சொத்தை, வங்கி கையகப்படுத்திக் கொள்ளவதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சொத்தை, யாரும் வாங்கவோ, விற்கவோ முயல வேண்டாம் என்று வங்கி கூறியுள்ளது.
இந்நிலையில் இப்பிரச்னை குறித்து மீடியா ஒன் நிறுவனம் சார்பில் ஒரு அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது, நாங்கள் 10 ஆண்டுகளாக மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தை நடத்தி வருகிறோம். பல படங்களை தயாரித்தும், விநியோகித்தும் உள்ளோம். இந்திய கலாச்சார படங்களை உலகளவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஆசை நீண்டநாளாக இருந்து வந்தது. அந்த நிலையில்தான் ரஜினி நடிப்பில் தயாராகி வந்த கோச்சடையான் படத்தை தயாரிக்க முன்வந்தோம். இப்படம் வெளிவருவதில் சில காலதாமதங்கள் ஏற்பட்டது.
அந்த நிலையில் எங்களுக்கு பண நெருக்கடியும் உருவானது. அப்போது லதா ரஜினிகாந்த் எங்களுக்கு உதவ முன்வந்தார். அவரது பெயரில் இருந்த சொத்துக்களை வங்கியில் வைத்து கடன் வாங்கி தந்தார். குறிப்பிட்ட தேதியில் கடனை கட்டமுடியவில்லை, அதனால் வங்கி, சொத்துக்களை கைப்பற்றபோவதாக அறிவித்துள்ளது. கடனை அடைக்க நாங்கள் உரிய முயற்சி நடத்தி வருகிறோம். வங்கியிடமும் தொடர்ந்து பேசி வருகிறோம். எங்களுக்கு உதவிய லதா ரஜினிகாந்த்தின் சொத்துக்களை மீட்டு நிச்சயமாக அவரிடமே உரிய முறையில் கொடுப்போம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.