'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு, ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில், அக்கினேனி நாகேஸ்வரராவ் விருது வழங்கப்பட்டது. திரைத்துறையில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் பொருட்டு, அக்கினேனி இன்டர்நேஷனல் பவுண்டேசன் சார்பில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விழாவில் நடிகர் நாகேஸ்வரராவின் மகன் நடிகர் நாகார்ஜூனா, அவரது மனைவி அமலா, மகன்களும், நடிகர்களுமான நாக சைதன்யா, அகில் உள்பட குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன் கலந்து கொண்டார். அவருக்கு நாகேஸ்வர ராவ் விருது வழங்கப்பட்டது. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் விருதை வழங்கினார்.
விழாவில் அமிதாப்பச்சன் பேசும்போது, இந்த விருதை பெறுவதன் மூலம் நான் பெருமை அடைகிறேன், என்றார்.