ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திற்கு தொடர்ந்து பரோல் வழங்கப்பட்டு வருவது தொடர்பாக, விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அமைச்சர் ராம் ஷிண்டே கூறியதாவது, சஞ்சய் தத் அடைக்கப்பட்டுள்ள சிறையில், 4ககும் மேற்பட்டோர் பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அவர்கள் இதுவரை ஒருமுறை கூட பரோலில் விடுவிக்கப்படவில்லை. ஆனால், சஞ்சய் தத்தோ, பலமுறை பரோலில் சென்று வருகிறார். சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது. சஞ்சய் தத்திற்காக, சட்டம் வளைக்கப்பட்டுள்ளதாக தான் கருதுகிறேன். இதனால், சஞ்சய் தத்திற்கு வழங்கப்படும் பரோல் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக ஷிண்டே கூறினார். பிகே படத்தை பார்ப்பதற்காக, 14 நாட்கள் கால அளவிலான பரோலில், சஞ்சய் தத் தற்போது வெளியில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.