விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
காமெடி என்ற பெயரில் தன்னுடன் நடிக்கும் ஹீரோக்களாக இருந்தாலும் சரி, அரசியல்வாதிகளாக இருநதாலும் சரி அவர்களை பேச்சுவாக்கில் வாரி விடுவார் சந்தானம். கூர்ந்து கவனிததால் மட்டுமே அவர் யார் யாரை எப்படி எப்படி வாரி விட்டுள்ளார் என்பது புரியும். இதனால் சில முன்னணி ஹீரோக்கள் சந்தானம் விசயத்தில் ரொம்ப ஜாக்கிரதையாக இருப்பார்கள். மேலும, சமீபகாலமாக பெண்கள்தான் அதிகமாக தியேட்டர்களுக்கே வருவதில்லை என்று தனது படங்களில் பெண்களையும் அவ்வ்பபோது டென்சன் பண்ணும் விதத்தில் காமெடி செய்து வந்த சந்தானம், ஜீவா நடித்த என்றென்றும் புன்னகை படத்தில் ஒரு பெண், சார் நான் 5 மணி 10 நிமிடத்துக்கு போகட்டுமா? என்று கேட்க வேணடியதை, சார் நான் 5,10க்கு போகட்டுமா? என்று கேட்பார். அதற்கு, பார்க்க நல்லாதானே இருக்கே ஏன் 5, 10க்கு போறே 50 , 100க்கே போகலாமே என்பார் சந்தானம். அதற்கு பெண்கள் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதனால் ட்ரெய்லரில் இடம்பெற்றிருந்த அந்த காட்சியை படத்தை வெளியிடும்போது கத்தரித்திருந்தனர்.
இந்த நிலையில் தற்போது உதயநிதியுடன் நடித்துள்ள நண்பேன்டா படத்தில் பெண்களை ரொம்ப உயர்வாக பேசி நடித்திருப்பதாக கூறும் சந்தானம், டாஸ்மாக் காட்சிகளிலும் நடிக்கவில்லையாம். இனிமேல் தான் நடிக்கப்போகும் படங்களில் யார் மனதையும் புண்படுத்தும் வசனங்களை திணிக்க மாட்டேன் என்று கூறுகிறார் சந்தானம்.