பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி |
இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவாகியுள்ள பாம்பே வெல்வெட் படம், இந்தாண்டின் நவம்பர் மாதத்திலேயே வெளியாக இருந்த நிலையில், தற்போது வெளியீடு, 2015ம் ஆண்டு மே மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது இயக்குநருக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், படம் குறித்து அவர் மகிழ்ச்சியாக உள்ளார் என்றே கூற வேணடும். இதுதொடர்பாக, இயக்குநர் அனுராக் காஷ்யப் கூறியதாவது, பாம்பே வெல்வெட் படத்தின் கதையை, சயீப் அலி கானை மனதில் வைத்து தான் உருவாக்கினேன். இந்த படத்தை, ரூ. 300 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்படுவதாக இருந்தது. ஆனால், இறுதிநேரத்தில், சயீப் அலி கான் இப்படத்தில் நடிக்க முடியாததையடுத்து, அமீர் கானிடமும் மற்றும் ஹிருத்திக் ரோஷனிடம் இந்த கதையை கூறினேன். அவர்களாலும், இப்படத்தில் நடிக்க முடியவில்லை. தற்போது, ரன்பீர் கபூரின் நடிப்பில், இப்படத்தை முடித்துள்ளேன். ரூ. 300 கோடி பட்ஜெட்டிலான படத்தை, ரூ. 90 கோடியிலேயே படமாக்கி உள்ளோம்.் படமும் சிறப்பாக வந்துள்ளதாக அவர் கூறினார்.