பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' என்று படத்துக்கு தலைப்பு வைத்துவிட்டு, கதை இல்லாத படம் என்று விளம்பரம் செய்தார் பார்த்திபன். அவர் எதிர்பார்த்ததுபோலவே 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமல்ல, விமர்சன ரீதியாகவும் பார்த்திபனுக்கு இப்படம் நல்ல பெயரை பெற்று தந்தது. சில தினங்களுக்கு முன் நடைபெற்று முடிந்த சென்னை சர்வதேச திரைப்படவிழாவில்கூட இந்தப்படத்துக்கு விருது கிடைத்தது. 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தின் வெற்றி பார்த்திபனுக்கு மிகப்பெரிய உற்காகத்தை அளித்துள்ள நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார் பார்த்திபன். அதற்கு 'கதை இருக்கு' என்று தலைப்பு வைத்துள்ளார். 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தில் கதையின் நாயகியாக நடித்த அகிலா கிஷோரே இப்படத்திலும் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அத்துடன் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தில் கெஸ்ட்ரோலில் தலையைக்காட்டிய ஆர்யா, விஜய்சேதுபதி உட்பட அனைவரையும் இரண்டாம் பாகத்திலும் பங்குபெற செய்ய பார்த்திபன் திட்டமிட்டுள்ளாராம். கதை இருக்கு என்ற தலைப்பில் உருவாகவிருக்கும் இந்தப்படத்தில் தலைப்புக்கு மாறாக கதை இருக்காதாம்.