ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'வேலையில்லா பட்டதாரி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரான வேல்ராஜ் மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க உள்ளார் என்று ஏற்கெனவே அறிவித்தார்கள். தனுஷ் ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கப் போகிறார் என்றும் செய்திகள் வெளியாகின. தற்போது தனுஷின் இன்னொரு ஜோடியாக சமந்தா நடிக்கப் போகிறார் என்பதை தனுஷே அறிவித்துள்ளார். இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு ஜாலியான யூத் என்டர்டெய்னராக இருக்கப் போகிறதாம்.
'கத்தி' படத்திற்குப் பிறகு சமந்தா விக்ரம் ஜோடியாக 'பத்து எண்ணுறதுக்குள்ளே' படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அவருக்கு தமிழில் வேறு எந்தப் படமும் ஒப்பந்தம் ஆகாமலே இருந்தது. தற்போது இந்தப் புதிய படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டார் என படத்தின் தயாரிப்பாளரும், நாயகனுமான தனுஷே அறிவித்து விட்டார். சமந்தாவிற்கு இந்த ஆண்டில் ஒரே ஒரு ஹிட் படம் தமிழில் அமைந்தாலும் அடுத்த ஆண்டிற்கு இப்போதே இரண்டு பெரிய படங்களை 'ரிசர்வ்' செய்து வைத்துவிட்டார். 2015ம் ஆண்டின் கனவுக் கன்னியாக இடம் பிடிக்க சமந்தா சமர்த்தாக முன்னேறி வருகிறார். தெலுங்கிலும், தமிழிலும் அவர் முன்னணி நடிகர்களின் ஜோடியாக மட்டுமே நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.