டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கோச்சடையான் படத்திற்காக, மீடியாஒன் நிறுவனத்திற்கு வங்கிக்கடனுக்காக, திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள ரூ.22.21 கோடியை உத்தரவாத தொகையாக, லதா ரஜினிகாந்த் வழங்கியிருந்தார். கடனை இதுவரை திரும்ப கட்டாததால், திருமுடிவாக்கம் சொத்தை, வங்கி கையகப்படுத்திக்கொள்ளவதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சொத்தை, யாரும் வாங்கவோ, விற்கவோ முயல வேண்டாம் என்று வங்கி கூறியுள்ளது. இந்நிலையில், கடனை திருப்பிச் செலுத்த, வங்கி தங்களுக்கு ஒரு மாத காலம் அவகாசம் அளி்த்திருப்பதாக ரஜினி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குமுன்னதாக, ஆட் பீரோ அட்வர்டைசிங் நிறுவனம், தங்களை ஏமாற்றிவிட்டதாக லதா ரஜினிகாந்த் மீது குற்றம் சுமத்தியிருந்தது. இதற்கு மீடியா ஒன் நிறுவனம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த பண பரிவர்த்தனையில் லதா ரஜினிகாந்த் ஒரு போதும் தலையிடவில்லை. ஆட் பீரோ கொடுத்ததாக சொல்ல கூடிய எந்தவொரு காசோலையோ, உத்திரவாத கையெழுத்தோ லதா ரஜினிகாந்த் கொடுக்கவில்லை. அவர்கள் 33 கோடி ரூபாய் பண பரிவர்த்தனையில் மட்டுமே கையெழுத்திட்டுள்ளார். அவை இந்த பரிவர்த்தனைக்கு உட்பட்டதில்லை. இந்த இரண்டு நிறுவனங்களின் பரிவர்த்தனையில் லதா ரஜினிகாந்தை சம்பந்தபடுத்த காரணம் அவர்களுக்கு தீங்கிழைக்கும் நோக்கமும், மிரட்டி பணம் பறிக்கும் நோக்கமுமே ஆகும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.