பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ரஜினியின் லிங்கா படம் வெளியாகி சில தினங்களிலேயே அப்படம் தோல்வியடைந்து விட்டதாக செய்திகள் பரவத் தொடங்கின. குறிப்பாக, அந்த படத்தை வாங்கியவர்கள் லிங்கா, இன்னொரு குசேலன் என்றனர். அந்த அளவுக்கு நஷ்டத்தை கொடுத்து விட்டது என்று சொன்னதோடு, சம்பந்தப்பட்டவர்களிடமும் நஷ்டஈடு கேட்டு தர்ணா செய்தனர். ஆனால், அதுபற்றி ரஜினிதரப்பில் இருந்து எந்தவித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. மாறாக, நான் அந்த படத்தில் நடிகர் மட்டுமே. அதனால் எனக்கும், வியாபாரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் இருந்து விட்டார். இருப்பினும், அப்படத்தின் டைரக்டரான கே.எஸ்.ரவிக்குமார் அதுபற்றி கூறுகையில், ரஜினிக்கென்று ஒரு வியாபாரம் உள்ளது. அதை மனதில் கொண்டுதான் படத்தின் பட்ஜெட் போடப்பட்டு படத்தை எடுத்தோம். அதேபோல் அனைவரும் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டுதான் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், படத்தை வாங்கியவர்களோ அவர்களே வெளியிடாமல், படத்தை பல கைமாற்றி விட்டனர். இப்படி மாற்றும்போது ஒவ்வொருவரும் ஒரு லாபத்தை வைத்து விற்பனை செய்தனர். இதனால் ஏரியா விலை பன்மடங்கு அதிகரித்து விட்டது. அதனால்தான், இப்போது போட்ட தொகை கிடைக்கவில்லை என்று புகார் சொல்கின்றனர். மேலும், எங்களிடமிருந்து படத்தை வாங்கிய நேரடி விநியோகஸ்தர்களுக்கு லாபம் கிடைத்து விட்டது. அவர்களிடமிருந்து வாங்கிய கடைசி நபருக்குத்தான் நஷ்டம் என்கிறார்கள். அதனால், ரஜினி படம் நஷ்டத்தை கொடுத்து விட்டது என்பதை ஏற்க முடியாது என்று தனது சார்பில் இருந்து கருத்து கூறி வருகிறார்.