நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
நடிகர்களை விட நடிகைகளிடம் அதிக நட்பாகி விடக்கூடியவர் ஆர்யா. படப்பிடிப்பில் அவர்கள் சிக்கி விட்டால், மணிக்கணக்கில் சளைக்காமல் கடலை போடக்கூடியவர் அவர். இந்த விசயத்தை நன்றாக தெரிந்த தமன்னா, இப்போது ஆர்யாவுடன் இணைந்து ராஜேஷ்.எம் இயக்கும் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தில் நடித்து வருகிறார்.
இதுதான் ஆர்யாவுடன் தமன்னா இணைந்து நடிக்கும் முதல் படம் என்றபோதும், இதற்கு முன்பே இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொண்டவர்கள்தான் என்பதால், முன்பே உஷாரான தமன்னா, ஆர்யா தனக்கான ஷாட்டை முடித்து விட்டு தன்னைத்தேடி வருகிறார் என்றால், பேசியே ஒரு வழி பண்ணி விடுவார் என்று தனது போனை காதில் வைத்து யாரிடமோ டீப்பாக பேசுவது போன்று அவரை கழட்டி விடுகிறாராம்.
அதனால், அப்படத்தின் படப்பிடிப்பில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்திருக்கிறார் ஆர்யா. ஆனால், அவர் தன்னுடன் நடிக்கும் எல்லா நடிகைகளையும் தனது ஹோட்டலுக்கோ அல்லது வீட்டிற்கோ அழைத்து சென்று பிரியாணி விருந்து கொடுப்பார் என்பதை ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த தமன்னா, இன்னும் எனக்கு பிரியாணியையே கண்ணில் காட்டவில்லையே என்று ஒரு வார்த்தைதான் சொன்னாராம்.