'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
பார்த்திபன் இயக்குனராக மட்டுமே செயல்பட்ட படம்தான் கதை திரைக்கதை வசனம் இயக்கம். அந்த படத்தில் கதையே இல்லை எனறு அவர் சொன்னாலும், ஒரு உதவி இயக்குனரின் கதையை மையமாக வைத்துதான் அந்த படத்தை இயக்கியிருந்தார். ஆர்யா, விஷால், விஜயசேதுபதி, அமலாபால், சேரன், பிரகாஷ்ராஜ் உள்பட பல திரை நட்சத்திரங்களையும் அப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்திருந்தார்.
புதுமுகம் சந்தோஷ் மற்றும் கன்னட நடிகை அகிலா கிஷோரும் அப்படத்தில் ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர். இதில் அகிலாவின் நடிப்பு பேசப்பட்டது. முக்கியமாக டைரக்டர் பாரதிராஜாவே அவரது நடிப்பை பெருமையாக குறிப்பிட்டதாக பார்த்திபன் அந்த சமயத்தில் தெரிவித்தார். அதோடு, அவரை நயன்தாரா சாயலில் இருப்பதாகவும் சொன்னார்கள்.
அதனால் முதல் படமே தமிழில் ஹிட்டடித்திருப்பதால் அடுத்து பல படங்களில் கமிட்டாகி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும், இப்போது மூன்றாம் உலகப்போர் என்ற படத்தில் மட்டுமே நடித்து வருகிறார் அகிலா கிஷோர். இந்தநிலையில், தனது அடுத்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை தற்போது முடித்திருக்கும் பார்த்திபன் அந்த படத்திற்கும் அகிலா கிஷோரையே நாயகியாக புக் பண்ணியிருக்கிறாராம்.