'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இரவு முழுக்க குடித்துவிட்டு காலையில் குளிக்காமல் கூட சில ஹீரோக்கள் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வருகிறார்கள், அவர்களுடன் ரொமான்ஸ் காட்சியில் நடிக்கும் போது குமட்டல் வருகிறது என்று கூறியுள்ளார் நடிகை கத்ரீனா கைப். பாலிவுட்டின் முன்னணி நடிகை கத்ரீனா கைப். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கத்ரீனாவிடம் பாலிவுட் ஹீரோக்களை பற்றி கேட்க, தனது மனகுமுறல்களை எல்லாம் கொட்டி தீர்த்து பாலிவுட் ஹீரோக்களை நாறடித்துவிட்டார்.
அப்படி என்ன சொன்னார்....?
கத்ரீனா கூறியதாவது, பாலிவுட்டில் ஹீரோக்கள் ரொம்ப மோசமானவர்கள், சுத்தமற்றவர்கள். இரவெல்லாம் குடித்துவிட்டு காலையில் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு குளிக்காமல் கூட கிளம்பி வந்துவிடுகிறார்கள். அவர்கள் ரொமான்ஸ் காட்சியில் நடிக்கும் போது ரொம்ப சிரமப்படுகிறேன். சில சமயங்களில் அந்த நாற்றத்தால் வாந்தி கூட வந்துவிடுகிறது. நான் எந்தளவுக்கு கஷ்டப்படுகிறேன் என்று அந்த கடவுளுக்கு தான் தெரியும் என்று கூறியுள்ளார்.
அதேசமயம் தென்னிந்திய ஹீரோக்கள் சூப்பரானவர்கள். ஹீரோயின்களை மதிக்க தெரிந்தவர்கள். பாலிவுட் ஹீரோக்கள், தென்னிந்திய ஹீரோக்களை பார்த்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.