Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

மாதவன் இடத்தை பிடிக்க வேண்டும்! - நடிகர் இர்பான் பேட்டி

23 டிச, 2014 - 11:22 IST
எழுத்தின் அளவு:

ஆரம்ப காலத்தில் நடித்த அந்த மாதவனைப்போன்று இப்போது நான் நடிக்க ஆசைப்படுகிறேன். இன்னும் சொல்லப்போனால் மாதவன் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே எனது நோக்கமாக உள்ளது என்கிறார் நடிகர் இர்பான்.


தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...




இபபோது என்னென்ன படஙக்ளில் நடித்து வருகிறீர்கள்?


பொங்கி எழு மனோகரா, ரு உள்பட 3 படங்களில் நடிக்கிறேன். இந்த படங்களில் இதுவரை நான் நடிக்காத வித்தியாசமான கதாபாத்திரங்கள். முக்கியமாக, காமெடி, ஆக்சன், ரொமான்டிக் என கலவையான வேடங்களில் நடிக்கிறேன். அதனால், நடித்து வரும் படங்கள் திரைக்கு வரும்போது இர்பான் நல்லதொரு கமர்சியல் நடிகர் என்று சொல்வார்கள்.


மேலும், பொங்கி எழு மனோகரா படத்தில் பால்காரன் வேடத்தில் நடிக்கிறேன். கதைப்படி எங்கள் குடும்ப தொழில். அது. ரஜினி சாரும் அண்ணாமலை படத்தில் இதே மாதிரி பால்காரராக நடித்திருப்பதால் இந்த வேடத்தில் அதிக உற்சாகத்துடன் நடித்து வருகிறேன். மேலும். இதில் சிங்கம்புலி முககிய காமெடியனாக நடிக்கிறார். அவரும், நானும் இணைந்து நடித்துள்ள காமெடி காட்சிகள் சத்யராஜ்-கவுண்டமணி கூட்டணி அமைத்து நடித்த படங்களை நினைவுபடுத்தும் வகையில் பெரிய அளவில் ஒர்க்அவுட் ஆகியுள்ளது. இப்போதைய ட்ரண்டில் சொல்ல வேண்டும் என்றால் சிவகார்த்திகேயன்-சூரி நடித்து வருவது போல் காடசிகள் அமைந்துள்ளன.


அதேபோல் ரு படத்தில் எமோஷனல் த்ரில்லர் கதையில் நடித்திருக்கிறேன். முதன்முறையாக முழு ஆக்சன் ஹீரோவாக நடிக்கிறேன். கற்பழிப்பு குற்றம் செய்யும் நான்கு பேருக்கு தண்டனை கொடுக்கும் அதிரடியான வேடம். இந்த படத்துக்காக காசி உள்பட வட இந்தியாவிலுள்ள பல பகுதியில் படபபிடிப்பு நடந்தது. அதோடு, இந்த படத்துக்காக எனது உடல் எடையை 14 கிலோ அதிகப்படுத்தி நடித்துள்ளேன்.


சரவணன் மீனாட்சி தொடரில் இருந்து திடீரென விலகியதேன்?


கனா காணும் காலங்கள் தொடரில்தான் நான் முதலில் நடித்தேன். நல்ல பெயர் கிடைத்தது. அதையடுத்து, சினிமாவுக்கு வந்து பட்டாளம், எப்படி மனசுக்குள் வந்தாய், சுண்டாட்டம் என பல படங்களில் நடித்தேன். அதன்பிறகு, சரவணன் மீனாட்சி தொடரிலும் நடித்தேன். ஆனால், சினிமாவில் கிடைத்ததை விட அதிகப்படியான ரசிகைகள் எனக்கு கிடைத்தனர். எப்போது போனை அட்டன் பண்ணினாலும் ரசிகைகள்தான் எதிர்முனையில் பேசுவார்கள். அது சில சமயங்களில் தொல்லையாக தெரிந்தாலும். அவர்களின் அன்புதான் என்னை இந்த அளவுக்கு வளர்த்திருப்பதாக கருதுகிறேன்.


மேலும், நான் சரவணன் மீனாட்சி தொடரில் இருந்து விலகியதற்கு காரணம், சினிமாவிலும் நடிப்பதால் டேட்ஸ் ப்ராபளம் ஏற்பட்டது. அதனால்தான் இரண்டில் எந்த மீடியாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என்றபோது சினிமாதான் சரியாகப்பட்டது. அதனால்தான் இப்போது சினிமாவுக்கே முழு நேரத்தையும் ஒதுக்கி விட்டேன்.


சினிமாவில் எந்த மாதிரியான ஹீரோவாக இடம் பிடிக்க திட்டமிட்டுள்ளீர்கள்?


இந்த மாதிரிதான் என்றில்லாமல் எந்த மாதிரியான வேடங்களிலும் நடிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன். ஆனால், இப்போது நான் வளர்ந்துவரும் நடிகன் என்பதால் எனக்கு பொருந்தக்கூடிய காதல், காமெடி, ஆக்சன் போன்ற கதைகளுக்கு முதலிடம் கொடுப்பேன். எந்த கதையாக இருந்தாலும், அதில் முழு ஈடுபாடு காட்டி நடிப்பேன். என்னைப்போலவே சின்னத்திரையில் இருந்து வந்த சிவகார்த்திகேயன் தற்போது சினிமாவில் பெரிய ஹீரோவாகியிருக்கிறார். அதனால் அவரைப்போன்று நானும் சினிமாவில் பெரிய நடிகராக வளர வேண்டும் என்பதே எனது நோக்கம். அதற்காக இப்போது கடினமாக உழைக்கிறேன். நடித்து வரும் படங்கள் எனக்கு அப்படியொரு நல்ல பெயரை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறேன்.




மல்டி ஹீரோ கதைகளில் நடிப்பீர்களா?


நான் நடித்த பட்டாளம், எப்படி மனசுக்குள் வந்தாய் போன்ற படங்களிலேயே இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்டில்தான் நடித்தேன். அதனால் மல்டி ஹீரோ கதைகளில் நடிப்பதில் எனக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை. இந்தியில் ஒரே படத்தில் பல ஹீரோக்கள் நடிப்பது சகஜம். ஆனால் நம்ம ஊரில் அந்த மாதிரி அதிகமாக இல்லை என்றாலும். இப்போது சில படங்களில் பல ஹீரோக்கள் இணைந்து நடித்து வருகிறார்கள். அதனால், நல்ல வாய்ப்புகள் அமைகிறபட்சத்தில் நானும் மல்டி ஹீரோ கதைகளில் கட்டாயம் நடிப்பேன். இப்படி படத்துக்குப்படம் சிங்கிள் ஹீரோவாக நடிக்காமல், அவ்வப்போது மற்ற ஹீரோக்களுடனும் இணைந்து நடிப்பதும் ஒரு நல்ல அனுபவமாகத்தான் இருக்கும். அதோடு, நடிப்பில் ஒருவருக்கொருவர் போட்டி போடும்போது நமக்குள் இருக்கும் திறமை முழுசாக வெளிப்படும். அதனால் மல்டி ஹீரோ கதைகளை நான் வரவேற்கிறேன்.




தமிழில் உங்களது ரோல் மாடல் ஹீரோ யார்?


மாதவன்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் நடித்த மின்னலே, அலைபாயுதே என ஒவ்வொரு படத்தையும் ரசித்திருக்கிறேன். ஒவ்வொரு கேரக்டரையும் உணர்ந்து அதற்கேற்ப துருதுருவென்று நடித்திருப்பார். சமீபகாலமாக அவரது கதை செலக்சன் மாறி விட்டது. தற்போது இறுதிச்சுற்று படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.


ஆனால், ஆரம்ப காலத்தில் நடித்த அந்த மாதவனைப்போன்று இப்போது நான் நடிக்க ஆசைப்படுகிறேன். இன்னும் சொல்லப்போனால் மாதவன் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே எனது ஆசையாக உள்ளது. அதனால் அவர் நடித்தது போன்று யூத்புல்லான கதைகளை எதிர்பார்க்கிறேன். ஆக, எப்போதுமே எனது ரோல் மாடல் மாதவன்தான்.


தமிழில் உங்களது மனங்கவர்ந்த ஹீரோயினி யார்?


என் மனங்கவர்ந்த ஹீரோயினி என்றால் அது ஜெனிலியாதான். அவர் நடித்த பாய்ஸ், சச்சின், சந்தோஷ்சுப்ரமணியம், வேலாயுதம் என எல்லா படங்களிலுமே அவரது நடிப்பை ரசித்திருக்கிறேன். அவரது சுறுசுறுப்பான இயல்பான பர்பார்மென்ஸ் எனக்கு ரொம்பவே பிடிக்கும். அதனால் அவருடன் டூயட் பாட வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருந்தது. ஆனால் அவர்தான் இந்தி நடிகர் ரித்தேஷ்தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு அம்மாவாகி விட்டாரே. ஆனபோதும், ஜெனிலியா நடித்த படங்கள் இப்போது எந்த சேனலில் போட்டாலும் ஆர்வத்துடன் ரசிப்பேன். அதேபோல் எதிர்காலத்தில் ஒருவேளை அவர் நடிக்க வந்து அந்த படத்தில் நானும் நடிக்க நேர்ந்தால் அதை விட பெரிய சந்தோசம் எதுவும் இருக்க முடியாது என்கிறார் இர்பான்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in