மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
'சீனிகம், பா' போன்ற படங்களை இயக்கிய பால்கி தற்போது அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷரா ஹாசன் ஆகியோர் நடிக்க, இளையராஜா இசையில் உருவாக்கி வரும் படம் 'ஷமிதாப்'. இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் ஆடியோ போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டன. நேற்று முழுவதும் இதைப் பற்றிய கமெண்ட்டுகளும், கருத்துக்களும்தான் சமூக வலைத்தளங்களில் நிரம்பி வழிந்தன. தமிழ்நாட்டைச் சேர்ந்த இயக்குனர் பால்கி, இசையமைப்பாளர் இளையராஜா, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், நாயகன் தனுஷ், நாயகி அக்ஷரா ஹாசன் இணைந்து இந்தியாவின் மிகப் பெரும் நட்சத்திரமான அமிதாப்புடன், பலரும் எதிர்பார்க்கும் ஒரு படத்தை உருவாக்கி வருகிறார்கள்.
இந்தப் படத்தில் தனுஷ் நடிகராகவும், அமிதாப் பின்னணிக் குரல் கொடுப்பவராகவும் நடிக்கிறார்கள் என்ற தகவல் ஏற்கெனவே வெளியானது. இப்போது படத்தின் கதையே தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு திரைப்படக் கலைஞர்களைப் பற்றிய கதைதான் என்ற பேச்ச பரவலாக எழுந்துள்ளது. 80களில் முன்னணி காதல் நாயகனாக வலம் வந்தவர் மோகன். அவரே அச்சு அசலாகப் பேசுவது போல் அவருக்குக் குரல் கொடுத்தவர் எஸ்.என்.சுரேந்தர். இவர் இன்றைய டாப் ஹீரோவான விஜய்யின் தாய் மாமன் என்பது குறிப்பிடத்தக்கது.
மோகனுக்கும், சுரேந்தருக்கும் ஒரு கட்டத்தில் பிரச்னை வந்து சுரேந்தர், மோகனுக்கு டப்பிங் பேசுவதை நிறுத்திவிட்டார். அதன் பின் மோகன் சொந்தக் குரலில் பேசி நடிக்க அந்தக் குரல் ரசிகர்களை ஈர்க்காமல் போக, அதனால் அவருக்கு வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போயின. 90களின் ஆரம்பத்தில் அவருக்கு வாய்ப்புகள் சுத்தமாக நின்று போய்விட்டன. இந்த விஷயத்தைத்தான் பால்கி 'ஷமிதாப்' படத்தில் திரைப்படமாக எடுத்துள்ளார் என்று பேசிக் கொள்கிறார்கள்.
'ராஞ்சனா' படத்திற்குப் பிறகு தனுஷ் நடிக்கும் இந்திப் படம் இது. அந்தப் படத்தைப் போலவே இந்தப் படத்தை தமிழில் டப்பிங் செய்து, சரியாக விளம்பரப்படுத்தி வெளியிட்டால் கண்டிப்பாக நல்ல வரவேற்பைப் பெறலாம்.