'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமன்னாவின் பிறந்த நாளான நேற்று முன் தினம், 21ம் தேதி பலருக்கும் அவருக்கு வாழ்த்துகளைச் சொல்லியிருக்கிறார்கள். அவரும் மிக முக்கியமானவர்களுக்கு நன்றி சொல்லியிருக்கிறார். சமந்தா உட்பட சில நடிகைகள் அவருக்கு வாழ்த்து சொன்னதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால், தமன்னாவுடன் இதுவரை எந்தப் படத்திலும் ஜோடி சேர்ந்து நடிக்காத சிவகார்த்திகேயன் வாழ்த்து சொன்னது பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் சிவகார்த்திகேயனைப் பற்றிய வதந்திகளுக்கு றெக்கை கட்டிப் பறக்க விட்டதைப் போல் ஆகியிருக்கிறது.
'மான் கராத்தே' படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க சம்மதித்த போதே கோலிவுட் வட்டாரம் ஆச்சரியத்துடன் பார்த்ததை விட அதிர்ச்சியுடன் பார்த்தது. அதற்கடுத்து அவர் தற்போது மீண்டும் ஸ்ரீதிவ்யாவுடன் 'காக்கி சட்டை' படத்திலும், புதுமுக நாயகி கீர்த்தி சுரேஷுடன் 'ரஜினி முருகன்' படத்திலும் நடித்து வருகிறார். கடந்த வாரம், சுந்தர்.சி இயக்க உள்ள படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போவதாகவும், அந்த வாய்ப்பை அவரிடம் பேசி ஹன்சிகாதான் பெற்றுத் தந்தார் என்றும் செய்திகள் வெளியாகின. அதன்பின் சுந்தர்.சியிடமே, தனக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க வேண்டுமென சிவகார்த்திகேயன் கேட்டதாகவும் சொன்னார்கள். அதைக் கேட்டு ஹன்சிகாவும் அதிர்ச்சியடைந்ததாக செய்திகள் வெளிவந்தன.
அப்படியிருக்க தமன்னாவின் பிறந்த நாளுக்கு சிவகார்த்திகேயன் வெறுமனே வாழ்த்து சொல்லியிருப்பார் என்பதை நம்ப முடியவில்லை. தமன்னாவும் பதிலுக்கு அவருக்கு நன்றி சொல்லி 'காக்கி சட்டை' வெற்றியடைய வாழ்த்து சொல்லியிருக்கிறார். அநேகமாக, சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் தமன்னா நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.