நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
ஒரு படம் இயக்குவதற்கே சரியான தயாரிப்பாளர் கிடைக்காமல் பல புதுமுக இயக்குனர்கள் கோடம்பாக்கத்தில் போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் புதுமுக இயககுனர் ஜெபா என்பவரோ, ஒரே நேரத்தில், மங்குனி பாண்டியர்கள், யாரிடமும் சொல்லாதே என்ற இரண்டு படங்களை இயக்கி வருகிறார். கமர்சியல் மற்றும் புதுமுக நடிகர்களும் கலந்து நடிக்கும் இந்த படங்களில் யாரிடமும் சொல்லாதே படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கிறாராம்.
இதுபற்றி இயக்குனர் ஜெபா கூறுகையில், ஒரு கிராமத்தில் மங்குனி, பாண்டியர்கள் என்ற இரண்டு விதமான கேரக்டர்கள் இருக்கும. அந்த வகையில், முட்டாள்கள், புத்திசாலிகள் என்ற இரண்டு பேரிடமும் ஒரே விசயத்தை கொடுக்கும்போது அவர்களிடமிருந்து எந்த மாதிரியான ரியாக்சன் வருகிறது என்பதைத்தான் இந்த படத்தில் நகைச்சுவையாக கதை பண்ணியிருக்கிறேன். அந்த வகையில், 100 சதவிகிதம் காமெடி, காதல் இரண்டும் கலந்து இப்படம் உருவாகிறது.
மேலும், புதுமுகங்கள் பலர் நடித்திருந்தாலும, லிவிங்ஸ்டன், பாண்டு, காதல் தண்டபாணி, நெல்லை சிவா என பல கமர்சியல் நடிகர்களும் நடிக்கிறார்கள். இதில் லிவிங்ஸ்டன் செல்வாக்கு இல்லாதவர்கள் அரசியலுக்கு வந்தால் என்ன நிலை ஏற்படும் என்பதை சொல்லும் ஒரு ரோலில் நடித்துள்ளார். வாத்தியாராக இருந்து அரசியல்வாதியாக மாறும் ஒருவருடைய லைப் எந்த மாதிரியாக மாறுகிறது என்பதை சொல்லும் வகையில் அவரது வேடம் அமைந்துள்ளது. இந்த படத்தில புதுமுகம் ராஜா என்பவர் ஹீரோவாக நடிக்கிறார். ஆரம்பத்தில் இந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய அவர் இப்போது ஹீரோவாகியிருக்கிறார். ஹீரோயினியாக மஞ்சு நடிக்கிறார்.
அடுத்து, நான் இயக்கும் யாரிடமும் சொல்லாதே படம் த்ரில்லர் கதையில் தயாராகிறது. மனோபாலா, ராஜ்கபூர், மீரா கிருஷ்ணன், நெல்லை சிவா என ஒரு நகைச்சுவை பட்டாளமே அந்த படத்தில் நடிக்கிறார்கள். லீடு ரோலில் மட்டும் சத்யராஜிடம் பேச உள்ளேன், சத்யராஜ் சார் கேரியரில் எத்தனையோ விதமான வேடங்களில் நடித்து விட்டார். இது அவரது கேரியரில் ரொம்ப வித்தியாசமான படமாக இருக்கும். ஒரேயொரு படத்தில் அவர் பாதிரியாராக நடித்திருந்தார். ஒரு புத்தகத்தில் துப்பாக்கியை வைத்து விட்டு செல்வார். அதில் வில்லத்தனமாக பண்ணியிருப்பார்.
ஆனால், இந்த படத்தில் அந்த பாதிரியார் வேடம்தான் ஹீரோ. ஜோடி இல்லாத பாடல் இல்லாத தனிப்பட்ட ஹீரோ வேடம். சத்யராஜ் இதுவரை பண்ணாத கதாபாத்திரம் என்று அடித்து சொல்ல முடியும் என்று கூறும் டைரக்டர் ஜெபா, இதில் மங்குனி பாண்டியர்கள் படம், முதன்முறையாக ஒரு மிகப்பெரிய விஷயத்தை அழுத்தமாக சொன்ன படம் என்று பேசப்படக்கூடியதாக இருக்கும். வெறும் கருத்தாக சொன்னால் அது ரீச்சாகாது என்பதால் காமெடியையும் கலந்து சொல்லியிருக்கிறேன். அதாவது வாழைப்பழத்தில் ஊசி ஏத்துவது போன்று கருத்துடன் காமெடியை கலந்திருக்கிறேன் என்கிறார்.