Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கும் புதுமுக இயக்குனர் ஜெபா!

23 டிச, 2014 - 10:25 IST
எழுத்தின் அளவு:

ஒரு படம் இயக்குவதற்கே சரியான தயாரிப்பாளர் கிடைக்காமல் பல புதுமுக இயக்குனர்கள் கோடம்பாக்கத்தில் போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் புதுமுக இயககுனர் ஜெபா என்பவரோ, ஒரே நேரத்தில், மங்குனி பாண்டியர்கள், யாரிடமும் சொல்லாதே என்ற இரண்டு படங்களை இயக்கி வருகிறார். கமர்சியல் மற்றும் புதுமுக நடிகர்களும் கலந்து நடிக்கும் இந்த படங்களில் யாரிடமும் சொல்லாதே படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கிறாராம்.


இதுபற்றி இயக்குனர் ஜெபா கூறுகையில், ஒரு கிராமத்தில் மங்குனி, பாண்டியர்கள் என்ற இரண்டு விதமான கேரக்டர்கள் இருக்கும. அந்த வகையில், முட்டாள்கள், புத்திசாலிகள் என்ற இரண்டு பேரிடமும் ஒரே விசயத்தை கொடுக்கும்போது அவர்களிடமிருந்து எந்த மாதிரியான ரியாக்சன் வருகிறது என்பதைத்தான் இந்த படத்தில் நகைச்சுவையாக கதை பண்ணியிருக்கிறேன். அந்த வகையில், 100 சதவிகிதம் காமெடி, காதல் இரண்டும் கலந்து இப்படம் உருவாகிறது.


மேலும், புதுமுகங்கள் பலர் நடித்திருந்தாலும, லிவிங்ஸ்டன், பாண்டு, காதல் தண்டபாணி, நெல்லை சிவா என பல கமர்சியல் நடிகர்களும் நடிக்கிறார்கள். இதில் லிவிங்ஸ்டன் செல்வாக்கு இல்லாதவர்கள் அரசியலுக்கு வந்தால் என்ன நிலை ஏற்படும் என்பதை சொல்லும் ஒரு ரோலில் நடித்துள்ளார். வாத்தியாராக இருந்து அரசியல்வாதியாக மாறும் ஒருவருடைய லைப் எந்த மாதிரியாக மாறுகிறது என்பதை சொல்லும் வகையில் அவரது வேடம் அமைந்துள்ளது. இந்த படத்தில புதுமுகம் ராஜா என்பவர் ஹீரோவாக நடிக்கிறார். ஆரம்பத்தில் இந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய அவர் இப்போது ஹீரோவாகியிருக்கிறார். ஹீரோயினியாக மஞ்சு நடிக்கிறார்.


அடுத்து, நான் இயக்கும் யாரிடமும் சொல்லாதே படம் த்ரில்லர் கதையில் தயாராகிறது. மனோபாலா, ராஜ்கபூர், மீரா கிருஷ்ணன், நெல்லை சிவா என ஒரு நகைச்சுவை பட்டாளமே அந்த படத்தில் நடிக்கிறார்கள். லீடு ரோலில் மட்டும் சத்யராஜிடம் பேச உள்ளேன், சத்யராஜ் சார் கேரியரில் எத்தனையோ விதமான வேடங்களில் நடித்து விட்டார். இது அவரது கேரியரில் ரொம்ப வித்தியாசமான படமாக இருக்கும். ஒரேயொரு படத்தில் அவர் பாதிரியாராக நடித்திருந்தார். ஒரு புத்தகத்தில் துப்பாக்கியை வைத்து விட்டு செல்வார். அதில் வில்லத்தனமாக பண்ணியிருப்பார்.


ஆனால், இந்த படத்தில் அந்த பாதிரியார் வேடம்தான் ஹீரோ. ஜோடி இல்லாத பாடல் இல்லாத தனிப்பட்ட ஹீரோ வேடம். சத்யராஜ் இதுவரை பண்ணாத கதாபாத்திரம் என்று அடித்து சொல்ல முடியும் என்று கூறும் டைரக்டர் ஜெபா, இதில் மங்குனி பாண்டியர்கள் படம், முதன்முறையாக ஒரு மிகப்பெரிய விஷயத்தை அழுத்தமாக சொன்ன படம் என்று பேசப்படக்கூடியதாக இருக்கும். வெறும் கருத்தாக சொன்னால் அது ரீச்சாகாது என்பதால் காமெடியையும் கலந்து சொல்லியிருக்கிறேன். அதாவது வாழைப்பழத்தில் ஊசி ஏத்துவது போன்று கருத்துடன் காமெடியை கலந்திருக்கிறேன் என்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in