ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
லிங்கா பட பிரச்னையில், நடிகர் ரஜினியின் பதிலை எதிர்பார்க்கிறோம். தீர்வு கிடைக்காவிட்டால், அடுத்த வாரம், ரஜினிக்கு சொந்தமான கல்யாண மண்டபத்தை முற்றுகையிடுவோம் என, வினியோகஸ்தர்கள் கூறியுள்ளனர்.
ஆர்ப்பாட்டம்:லிங்கா படத்திற்கு தியேட்டர்களில் எதிர்பார்த்த வசூல் இல்லை என்பதால், நஷ்டமடைந்த வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், சென்னை, கோடம்பாக்கத்தில், ரஜினிக்கு சொந்தமான, திருமண மண்டபம் முன், ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், நேற்று யாரும் அங்கு வரவில்லை.
இதுகுறித்து, வினியோகஸ்தர்கள் சிலர் கூறியதாவது: செங்கல்பட்டு ஏரியா, 14 கோடி ரூபாய்; திருச்சி, தஞ்சை ஏரியா, 8 கோடி ரூபாய் கொடுத்து, லிங்கா பட வினியோக உரிமை பெற்று தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. ரஜினி படம் சாதாரணமாக, 10 நாட்கள், ஹவுஸ் புல்லாக ஓடும். இதை கணக்கிட்டு தான், ஏரியாவுக்கு தகுந்தபடி, 6 லட்சம் - 30 லட்சம் ரூபாய் என, தியேட்டர் உரிமையாளர்களால், வினியோகஸ்தர்களுக்கு முன்தொகை கொடுக்கப்பட்டுள்ளது.
வருகை குறைந்து:ஆனால், சென்னை மற்றும் முக்கிய நகரங்களை தவிர, மற்ற இடங்களில், 15ம் தேதியில் இருந்து, ரசிகர் வருகை குறைந்து விட்டது. இதனால், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை பெற்றுள்ள, வேந்தர் மூவீஸ் நிறுவனத்தையோ, படத்தின் தயாரிப்பு நிறுவன, நிர்வாகிகளையோ தொடர்பு கொள்ள முடியவில்லை. நாங்கள் ஒப்பந்தத்தை மீறுவதாக கூறுகின்றனர். நாங்கள், வரும், 29ம் தேதி வரை காத்திருப்போம். நஷ்டம் அதிகமாக உள்ளதால், ரஜினி தலையிட்டு பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும். இல்லாவிடில், நஷ்டமடைந்த வினியோகஸ்தர்கள் ஒன்று கூடி, படத்தை மொத்தமாக வினியோகம் செய்த நிறுவன அலுவலகம் மற்றும் ரஜினியின் கல்யாண மண்டபத்தை முற்றுகையிடுவோம். இவ்வாறு, வினியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -