Advertisement

சிறப்புச்செய்திகள்

‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ட்ரெய்லரை பார்த்து படத்தை முடிவு செய்யக்கூடாது : பாக்யராஜ்

22 டிச, 2014 - 14:20 IST
எழுத்தின் அளவு:

வி.ஜி. எஸ் நரேந்திரன் வழங்க . மெலடி மூவீஸ் தயாரிக்கும் தரணி படத்தை, குகன்சம்பந்தம் இயக்கியுள்ளார். பி.என்சோன், இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். ஆரி, குமரவேல், அஜய் கிருஷ்ணா, வருணிகா, சான்ட்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு :ஆர்.பிரகாஷ்,.வினோத்காந்தி.


தரணி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. ஆடியோ சிடியை, கே.பாக்யராஜ் வெளியிட்டார். படக்குழுவினரும், வந்திருந்த திரையுலக முன்னணியினரும் இசை சிடியை பெற்றுக்கொண்டனர்.


விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேசும் போது " இந்தப்படத்தின் இசையமைப்பாளர் என்சோனை நான் என் முதல் படத்திலிருந்து பார்த்து வருகிறேன். இந்தியாவிலேயே நான் பார்த்த ஒரே கண்டக்டர் இவர்தான். நிறைய கண்டக்டர்களை வீடியோவில் தான் பார்ப்பேன். மியூசிக் கண்டக்டர் என்பது மிகவும் கடினமான வேலை. இயக்குநர் இசையமைப்பாளர் வேலைக்கு உயிர் கொடுப்பதே இவர்கள்தான். அவ்வளவு கடினமான வேலை..இவரது வேலையை நான் வேடிக்கை பார்த்ததுண்டு..பாக்யராஜ் வரும்போதே குகனிடம் கேட்டார் யாரிடம் வேலை பார்த்தீர்கள் என்று. நான் யாரிடமும் வேலை பார்க்கவில்லை என்றார் பெருமையாக. இந்த தரணி தமிழ்சார்ந்த நல்ல தமிழ்ப் படமாகத் தெரிகிறது.இங்கே வருடத்துக்கு 365 படங்கள் வருகின்றன.எல்லாப் படங்களும் ஓடவேண்டும் .தரணி யும் ஓடவேண்டும்" என்றார்.


இசைத்தட்டை வெளியிட்டு கே.பாக்யராஜ் பேசினார். அவர் பேசும் போது "இங்கே மிஷ்கின் பேசும்போது சின்ன சஸ்பென்ஸ் வைத்தார். இந்தியாவிலேயே நான் பார்த்த ஒரே கண்டக்டர் என்றதும் நான் ரஜினிகாந்தா என்று நினைத்தேன் இந்தப் படத்தின் இசையமைப்பாளரைப் பற்றிப் பலரும் பேசும்போது அவரது பணி அனுபவத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. கூடவே இருந்து அவரது பணியைப் பார்த்தவர்கள் சொல்லும் போது என்சோன் திறமையை அறிய முடிந்தது. அந்த அனுபவங்கள் அவர் இசையமைப்பாளராக பெரிதும் உறுதுணையாக இருக்கும் என்று நினைக்கிறேன். குகன் எடுத்த ட்ரெய்லர் சில காட்சிகளைப் பார்க்கும் போது இது எப்படிப்பட்ட படம் என்று புரியவில்லை. ட்ரெய்லர் பார்த்து சில காட்சிகளைப் பார்த்து படம் பற்றி முடிவு செய்யக் கூடாது.இந்தப் படத்தின் சில காட்சிகளைப் பார்க்கும் போது இது நாடகக்கலை பற்றிய கதையோ என நினைத்தேன்.ஆரி வரும் சில காட்சிகளைப் பார்க்கும் போது, வேறு மாதிரி தெரிந்தது. மணல் லாரிகள் வரும் காட்சிகளைப் பார்க்கும் போது அது வேறு மாதிரி தெரிந்தது. புரிந்து கொள்ள முடியவில்லை. பாடல் காட்சிகள் வேறுமாதிரி இருக்கின்றன.


ஆனால் வித்தியாசமான படமாக இருக்கும் என்று மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது. " என்று கூறி படக்குழுவினரை வாழ்த்தினார்.


பிரபு சாலமன் பேசும் போது " இந்தப்படத்தின் பாடல்களின் வரிகள் மண்ணின் மணம் பேசும்படி கலாச்சாரம் பேசும்படி இருக்கின்றன.இந்தப்படம் கலைசார்ந்த படமாகத் தெரிகிறது.. சரியாக எதையும் சொல்ல முடியும் என்று காட்டுகிற படமாக தெரிகிறது." . என்றார்.


இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் " என்சோன் திறமையான கண்டக்டர். இதில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.இவர் என்னிடம் மட்டுமல்ல பலரிடமும் வேலை பார்த்தவர். நல்ல அனுபவம் உள்ளவர். இதில் ஆறுபாடல்களுக்கு அழகான இசை கொடுத்திருக்கிறார். " என்றார்.


படத்தின் இயக்குநர் குகன்சம்பந்தம் படம் பற்றிப் பேசும் போது "இது மூன்று மனிதர்கள் பற்றிய கதை.வாழ்க்கையில் சரியான முடிவு எடுக்கும் தருணம் முக்கியமானது .ஆனால் ஒரு கட்டத்தில் முடிவெடுத்துதான் ஆக வேண்டும் அந்த முடிவு எங்கு கொண்டு சேர்க்கும் என்று தெரியாது. இதைப் பேசும் படம்தான் தரணி "என்றார்.


நடிகர் நாசர் பேசுகையில் "இது சராசரியான படமல்ல. முக்கியமான படம். மனித வாழ்க்கை புதிர்களும் மர்மங்களும் நிறைந்தது .உணவுக்கு வேட்டையாடி உண்டு உறங்குவது மிருக வாழ்க்கை. மனித வாழ்க்கை முற்றிலும் வேறுபட்டது பொருளாதாரம், அரசியல் சிக்கல்கள் நிறைந்தது. நாம் நினைத்தது நடப்பதில்லை. இன்று வெற்றி அடைபவன் அடுத்த சுற்றில் தோல்வி அடைகிறான் வெற்றிக்குப்பின் அவன் எண்ணம் எப்படி மாறுகிறது எப்படி முடிவு எடுக்கிறான் என்பதே படம். இவ்வளவு பெரிய தத்துவத்தை அழகாகச் சொல்லியிருக்கிறார். இயக்குநர். "என்றார் .


" இசையமைப்பாளர் என்சோன் எனக்குத் தெரிந்தவர் இசையும் தெரிந்தவர். அன்று முதல் அண்மையில் முடித்த கயல் படம் வரை என்னுடன் பணியாற்றியவர் " என்றார் இசையமைப்பாளர் டி.இமான்.


படம் பற்றி கவிஞர்கள் பழனிபாரதி, முத்துலிங்கம், இசையமைப்பாளர்கள் சத்யா, ஜி.வி.பிரகாஷ், கே., நடிகர்கள் சிம்பு, ஆரி, குமரவேல், அஜய் கிருஷ்ணா, நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன் ,வருணிகா, சாண்ட்ரா ஆகியோரும் பேசினார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in