ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நீதிமன்ற உத்தரவின்படி அடுத்த மாதம் 25ந் தேதி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல் நடக்க இருக்கிறது. நாளை (டிச 23) முதல் வேட்பு மனு தாக்கல் ஆரம்பமாகிறது. 26ந் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
இந்த தேர்தலில் கடும்போட்டி இருக்கும் என்று தெரிகிறது. கலைப்புலி எஸ்.தாணு தலைமையில் ஒரு அணியும், நாசரின் மனைவி கமீலா நாசர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடும் என்று தெரிகிறது. இதற்கிடையில் நானும் தனி அணி அமைத்து போட்டியிடுவேன் என்று மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: கடந்த 5 வருடங்களாக தயாரிப்பாளர் சங்கத்தில் எந்த வேலையும் நடக்கவில்லை. மாறி மாறி கோர்ட்டுக்குத்தான் போய்கொண்டு இருக்கிறார்கள். ஊழலும், முறைகேடும் மலிந்து விட்டது. பதவிக்கு வருகிறவர்கள் அதை பயன்படுத்தி பெரிய ஹீரோக்களை வைத்து படம் எடுக்கத்தான் முயற்சிக்கிறார்களே தவிர சங்கத்துக்காக உழைக்க மறுக்கிறார்கள். அதனால்தான் இந்த தேர்தலில் என் தலைமையில் ஒரு அணி போட்டியிடுகிறது. அதற்கு புதியவர்கள் அணி என்ற பெயர் வைத்திருக்கிறேன். நான் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன். மற்ற பதவிக்கு போட்டியிடுகிறவர்கள் பற்றி பின்னர் அறிவிப்பேன். இதுவரை எந்த பதவியும் வகிக்காதவர்கள் போட்டியிடுவார்கள்.