தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'லிங்கா' அலை கொஞ்சம் கொஞ்சமாக ஓய்ந்து வருவதையடுத்து, தற்போது கிறிஸ்துமஸ் அன்று வெளியாகும் படங்களையும் மீறி பொங்கலுக்கும் வெளிவரும் படங்களைப் பற்றிய தகவல்கள்தான் அதிகம் வெளிவந்து கொண்டிருக்கின்றன. “ஐ, என்னை அறிந்தால், ஆம்பள, கொம்பன்” ஆகிய படங்கள் பொங்கலுக்கு வெளிவரும் படங்களாக இருந்தாலும் அவற்றில், 'ஐ' படத்தைப் பற்றித்தான் அதிகமான பேச்சுக்களும், தகவல்களும் கோலிவுட்டைச் சுற்றி வருகின்றன. ஒரு படத்தின் வெளியீட்டிற்கு முன்னர் அதிகமான பேச்சுக்கள் அந்தப் படத்தைப் பற்றி எழுந்தால் அது ஒரு விதத்தில் ஆபத்துதான். அதுவே, எதிர்பார்ப்பை எகிற வைத்து அந்தப் படத்திற்கு நெருக்கடியைக் கொடுக்கும். படம் நன்றாக வந்துவிட்டால் பிரச்சனையில்லை, அப்படி இப்படி அமைந்தால் அவ்வளவுதான், தடுமாற்றம்தான்.
அப்படி ஒரு சூழ்நிலை 'லிங்கா' படத்திற்கு சமீபத்தில் அமைந்தது. தற்போது 'ஐ' படத்திற்கு ஆரம்பித்து விட்டது. தமிழில் பல ஏரியாக்களுக்கு 'ஐ' படத்தின் வியாபாரம் முடிந்து வரும் நிலையில், கூடவே ஆந்திரா, தெலுங்கானா ஏரியாக்களின் தெலுங்கு வியாபாரமும் ஆரம்பித்து நடந்து வருகிறது. படத்தை தெலுங்கில் மொத்தமாக விற்காமல் ஏரியா வாரியாக பிரித்து விற்று வருகிறார்களாம். அந்த விதத்தில் இதுவரை விசாகப்பட்டினம் ஏரியா 4 கோடி ரூபாய்க்கும், குண்டூர் ஏரியா 3.6 கோடி ரூபாய்க்கும், கிருஷ்ணா ஏரியா 2.3 கோடி ரூபாய்க்கும், கிழக்கு கோதாவரி ஏரியா 3 கோடி ரூபாய்க்கும் விற்கப்பட்டுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.