திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
ராம்கோபால் வர்மாவின் இயக்கத்தில் 'ரத்த சரித்ரா' என்ற திரைப்படம் இரண்டு பாகங்களாக 2010ம் ஆண்டு வெளிவந்தது. சூர்யா, விவேக் ஓபராய், சுதீப் மற்றும் பலர் அந்தப் படத்தில் நடித்திருந்தனர். தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இரண்டு பாகங்களாகவும் தமிழில் ஒரு பாகமாக 'ரத்த சரித்திரம்' என்றும் வெளியாகின. ஆந்திராவில் நடைபெற்ற சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அந்தப் படங்கள் உருவாக்கப்பட்டன. விமர்சன ரீதியாக பெரிதும் பாராட்டப்பட்ட படங்களாக அவை அமைந்தன.
அந்தப் படங்களின் தொடர்ச்சியாக ராம்கோபால் வர்மா 'ஸ்பாட்' என்ற பெயரில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்தப் படத்தில் ஹைதராபாத்தில் சுமார் 18 வருடங்களுக்கு முன் நடைபெற்ற ஓபுல் ரெட்டி என்பவரின் கொலையைப் பற்றியும், அந்தக் கொலை நடைபெற்றதன் பின்னணிக் காரணங்களையும் பற்றி படமாக எடுக்க உள்ளார்.
'ரத்த சரித்திரம்' படத்திலும் எண்ணற்ற கிளைக் கதாபாத்திரங்கள் இருந்தன. அந்தப் படத்தில் நான் நினைத்த அளவிற்கு பத்து சதவீதத்தைக் கூட நான் படமாக்கவில்லை. அந்தப் பட உருவாக்கத்தின் போது பல விஷயங்களைக் கேட்டு அறிந்தேன். அதன் தொடர்ச்சியாகத்தான் பல விஷயங்களை அறிந்து கொண்டதன் அடிப்படையில் 'ஸ்பாட்' படத்தை இயக்க உள்ளேன் என இந்தப் படத்தின் அறிமுக விழாவிலேயே தெரிவித்திருந்தார்.