இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை |
தமிழில் உதயன், சகுனி படங்களில் நடித்தவர் ப்ரணிதா. கன்னட நடிகையான இவருக்கு பின்னர் இங்கு பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வந்தார். தெலுங்கில் அவர் நடித்த அத்திரின்டிக்கி தாரடி என்ற படம் ஹிட்டாக அமைந்ததால், பல படங்கள் அவருக்கு கமிட்டாகின.
ஆனால், திரிவிக்ரம் என்ற இயக்குனரின் ஒரு படத்தில் நடித்தபோது ஸ்பாட்டில் அவருக்கும் , ப்ரணிதாவுக்கு லடாய் ஏற்பட்டு விட்டதாம். அதனால் அந்த படத்தில் இருந்தே விலகி விட்டாராம் ப்ரணிதா. அதனால் அந்த படத்தில் இப்போது நித்யாமேனன் நடித்து வருகிறாராம். மேலும், நாகார்ஜூனாவுடன் நடிக்க ஒரு பட வாய்ப்பு வந்தபோதும் அதை ஏற்க மறுத்து விட்ட ப்ரணிதா, தமிழில் மாஸ் படத்தில் நடிப்பதையடுத்து புதிய படங்களை கைப்பற்றி முழுவீச்சில் இறங்கியிருக்கிறார்.
மேலும், தமிழில் இவர் இறக்குமதியானபோது ஏகபபட்ட எதிர்பார்ப்பு இருந்தது. அடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகி விடுவார் என்றெல்லாம்கூட பேசப்பட்டார் ப்ரணிதா. அப்போது அது பொய்யாகி விட்டது. ஊனல், இந்த முறை அப்படி விடமாட்டேன். தமிழில் முன்னணி நடிகையாகாமல் பெங்களூருக்கு திரும்ப மாட்டேன் என்று சவாலாக பேசிக்கொண்டு வருகிறார் ப்ரணிதா.